தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

Published:

railway news - 2026
#image_title

தாம்பரம் —திருவனந்தபுரம் கொச்சுவேலி இடையே விருதுநகர் ராஜபாளையம் செங்கோட்டை கொல்லம் வழியாக வாரம் இரு முறை கோடைகால விடுமுறை சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. இந்த ரயில்கள் முழுமையான 16 எல் ஹெச்பி பெட்டிகளுடன் முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும்.

விருதுநகர் செங்கோட்டை புனலூர் கொல்லம் வழியாக மலைவழிப்பாதையில்இரு வழிகளிலும் இயக்கவுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரத்தில் வியாழன் சனிக்கிழமைகளில் இரவு 07.30 க்கு புறப்பட்டு வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 09.45 க்கு திருவனந்தபுரம் கொச்சுவேளி ரயில் நிலையத்தை சென்றடையும்.
திரும்பும்போது வெள்ளி ஞாயிறு தினங்களில் திருவனந்தபுரம் கொச்சுவேலி ரயில் நிலையத்தில் பகல் 12.30 க்கு புறப்பட்டு சனி திங்கள் கிழமைகளில் காலை 04.15க்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும்.

மேற்காணும் தகவல்களின்படி இந்த ரயில்கள் 16/05/24 முதல் 29/06/24 வரை தாம்பரத்திலிருந்தும் 17/05/24 முதல் 30/06/24 வரை திருவனந்தபுரம் கொச்சுவேலி யிலிருந்தும் இயக்கப்படும்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது. 14 பிளஸ் 2 மூன்றடுக்கு ஏசி எகானமி எல் எச் பி பெட்டிகளோடு இவை இயங்கும்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img