May 19, 2025, 11:29 PM
29.2 C
Chennai

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

pmmodi speech in meeting
#image_title

நண்பர்களே, காங்கிரஸ், தாழ்த்தப்பட்டவர்களின், பிற்பட்டவர்களின், பழங்குடியினத்தவர்களின், அதிகாரங்களைப் பறிக்கும், சதிகாரச் செயலை, பலகாலமாகவே செய்து வருகின்றது.  

2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதியன்று, அப்போது அவர்களின் ஆட்சி இருந்தது.   அப்போதிருந்த காங்கிரசின் மத்திய அரசு, மதத்தின் பெயரால், இடஒதுக்கீட்டை அளிக்கும், ஒரு குறிப்பை, ஒரு நோட், அமைச்சரவையில் முன்வைத்தது.  

இந்த அமைச்சரவைக் குறிப்பிலே, என்ன கூறப்பட்டிருந்தது தெரியுமா?   நமது ஓபிசி சமுதாயத்திற்கு, 27 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்து வருகிறது.   மண்டல் கமிஷனின் பரிந்துரைப்படி இட ஒதுக்கீடு கிடைத்து வருகிறது.  

அந்த இட ஒதுக்கீட்டின் ஒரு பகுதியை வெட்டியெடுத்து, 27 சதவீதத்திலிருந்து ஒரு பகுதியை பிரித்தெடுத்து, மதத்தின் பெயரால் கொடுக்கப்படும்.   வெறும் மூன்றே நாட்களில், 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதியன்று, இதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. 

அதன் பிறகு, ஆந்திர பிரதேசத்தின் உயர்நீதிமன்றம், காங்கிரஸ் அரசின் இந்த ஆணையினை, ரத்து செய்தது.   இவர்கள் உச்சநீதிமன்றத்துக்கும் சென்றார்கள்.   ஆனால் அங்கும் எந்தப் பயனுமில்லை.  

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

அதன் பிறகு 2014இலே, காங்கிரஸ் கட்சி, தேர்தல் அறிக்கையிலே பதிவிட்டது.   அதாவது மதத்தின் பெயரால், இட ஒதுக்கீடு செய்வதற்கு, சட்டம் இயற்றப்பட வேண்டுமானால் சட்டமும் இயற்றுவோமென்றார்கள்.  

ஆனால் 2014ஆம் ஆண்டிலே, ஓபிசி சமுதாயம் விழித்துக் கொண்டது.   தாழ்த்தப்பட்டவர்கள் விழித்துக் கொண்டார்கள்.  பழங்குடியினச்சமூகம் விழித்துக் கொண்டது.   அவர்கள் எல்லாம் தீர்மானம் செய்தார்கள், இவர்கள் வந்து இப்படியெல்லாம் செய்தால், நமது வருங்காலத் தலைமுறையினர் நாசமாகிப் போவார்களே!!   நம்முடைய கனவுகள் பொடிப்பொடியாகுமே!!  

இதன் பிறகு தான், இந்தச் சமூகங்களெல்லாம் ஒன்றிணைந்து, காங்கிரசின் கனவுக்கோட்டைகளைத் தரைமட்டமாக்கினார்கள், அவர்களை ஆட்சியிலிருந்து துரத்தி விட்டார்கள்.  

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

பிரதமர் மோடியின் உரைகள்
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ப. சிதம்பரமே பாராட்டும் அளவுக்கு… என்ன செய்தது பாஜக.,?

ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஆப்ரேஷன் தீஸ்டர்பீல்ட்: இது என்ன புதுசா?!

சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ்

மதுரை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிந்துபட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.

கொலைக்கள குண்டுகளும் கிரிக்கெட் பந்துகளும் ஒன்றாக வீச முடியாது!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மோஷின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்புக்கும் தலைவராக உள்ள நிலையில் இந்தியா இந்த முடிவை

Topics

ப. சிதம்பரமே பாராட்டும் அளவுக்கு… என்ன செய்தது பாஜக.,?

ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஆப்ரேஷன் தீஸ்டர்பீல்ட்: இது என்ன புதுசா?!

சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ்

மதுரை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிந்துபட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.

கொலைக்கள குண்டுகளும் கிரிக்கெட் பந்துகளும் ஒன்றாக வீச முடியாது!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மோஷின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்புக்கும் தலைவராக உள்ள நிலையில் இந்தியா இந்த முடிவை

அமெரிக்க புகைச்சலுக்கு அடுத்த காரணம் இதுதான்!

ஆப்கானிஸ்தானின் மிகப்பெரி ய ஏர்பேஸான பக்ராம் ஏர்பே ஸை கைப்பற்ற இந்திய அரசு தலிபான்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறது.

மீண்டும் தொடங்கிய ஐபிஎல்., 2025; அதே ‘டெம்போ’வில்!

புள்ளிப் பட்டியலில் தற்போது முதல் மூன்று இடங்களில் உள்ள குஜராத் (18), பெங்களூரு (17), பஞ்சாப் (17) ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி

பஞ்சாங்கம் மே 19 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories