கரும்பு சாறு பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1/4 கப்
பாசிப்பருப்பு – 1/8 கப்
கரும்புச்சாறு – 1 1/2 கப்
வெல்லம் – 1/8 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி – சிறிது
உலர் திராட்சை – சிறிது
ஏலக்காய் பொடி – சிறிது
செய்முறை:
முதலில் கரும்பின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின் அதை மிக்சரில் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதுப்போன்று 1 1/2 கப் அளவு கரும்பு சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைப் போட்டு லேசாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
பிறகு குக்கரில் கழுவிய அரிசி மற்றும் கரும்பு சாற்றினை எடுத்து, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி குறைவான தீயில் 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் வெல்லத்தை சேர்த்து அடுப்பில் வைத்து, நன்கு கரண்டியால் கிளறிவிட்டு வெல்லத்தை நன்கு கரைய வைக்க வேண்டும். அதன் பின் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி, உலர் திராட்சையைப் போட்டு வறுத்து, குக்கரில் உள்ள பொங்கலுடன் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கரும்புச்சாறு பொங்கல் தயார்.
குறிப்பு:
வேண்டுமானால் ப்ளேவருக்கு இதில் பச்சை கற்பூரத்தை சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் பயன்படுத்தும் பச்சரிக்கு ஏற்றவாறு விசில் விட்டுக் கொள்ளுங்கள்.