மனங்களில் உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர்

valluvar temple - 2026
  • ஜெயஸ்ரீ எம். சாரி, நாந்தேட்.

‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கெணுமே பிறந்ததில்லை’ என்று பாடிய பாரதியாரின் வரிகளானது தமிழ் மக்களின் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்றவை.
நம் தமிழ் புலவர்களைப் பற்றி நம் மாநிலம் தாண்டி அங்குள்ள மக்கள் நம்மிடம் கலந்துரையாடும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அளவிடமுடியாது என்பது திண்ணமே. அவ்வாறு, நம் திருவள்ளுவர் பற்றி எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பே இக்கட்டுரை.

சில வருடங்களுக்கு முன், நான் மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மராட்டிய துறவியான சந்த் கஜானன் மஹாராஜ் அவர்களினால் பிரசித்த பெற்ற ஷேகாவ் ( Shegaon) என்னும் திருத்தலத்திற்கு சென்றிருந்தேன். அங்கே, ஆனந்த் சாகர் என்னும் ஒரு கார்டன் உள்ளது. அதில் பாரத தேசத்தில் புகழ்பெற்றவர்களின் சிலைகள் ‘ சந்த் மண்டபம்’ என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ளது. அதில், நம் திருவள்ளுவர் சிலையும் உள்ளதை கண்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். அப்போது, நான் நாக்பூரில் இருந்து வெளிவரும் ஒரு ஆங்கில நாளிதழில் (‘தி ஹித்வாத்’) பணிபுரிந்து கொண்டிருந்தேன். அதனால், நான் ஷேகாவில் பார்த்த நம் திருவள்ளுவரைப் பற்றி ஒரு செய்தியை கொடுத்து திருவள்ளுவர் தினத்தன்று வெளியிடுமாறு கூறினேன். அந்தச் செய்தியும் அந்த நாளிதழில் வெளிவந்தது. .

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆறு மாதங்கள் சென்றன. அந்த நாளிதழின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்த சப்-எடிட்டர், என்னிடம்,” மேடம், நேற்று நம் பிரதமர் உங்கள் செய்தியில் நீங்கள் குறிப்பிட்டு இருந்த தமிழ் புலவர் திருவள்ளுவர் பற்றி கூறினாரே,” என்றார்.
அவர், அதோடு மட்டுமல்லாமல் பிரதமர் ஆற்றிய உரையையும் எனக்கு அனுப்பினார். அதில் நம் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அந்த வருடத்திய சுதந்திர உரையில் ‘நீரின்றி அமையாது உலகு’ – என்ற திருக்குறளை மேற்காட்டி மக்களுக்கு தண்ணீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார்.
என் அலுவலக நண்பருக்கு அவரின் ஞாபக சக்தியை பாராடி நான் அவருக்கு நன்றி கூறினேன்.

இதோ இரண்டாவது உதாரணம்:

சமீபத்தில் என் பட்ட மேற்படிப்பின் ஒரு பகுதியான ‘ப்ராஜெக்ட்’ டிற்காக எங்கள் நகரத்திற்கு அருகில் இருந்த ஒரு கிராமத்து பள்ளிக்கூடத்திற்கு சென்றேன். அங்கு என்னை நான் அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் அங்கு என்னோடு உரையாடிய ஆசிரியை ‘ நீங்கள் தமிழரா?” என கேட்டவுடன் நானும் “ஆமாம்,” என்றேன். உடனே, அவர் தன் மாணவியர்களை பார்த்து ” நம் மேதகு பாரதப் பிரதமர் தன் உரைகளில் திருக்குறள் சொல்வாரே, அந்த திருக்குறள் பிறந்த மண்ணில் இருந்து தான், இவர் வந்துள்ளார்,” என்று மராட்டி மொழியில் கூறிய போது மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

இவ்விரு நிகழ்ச்சிகளும் நம் திருவள்ளுவர் மொழிகளை கடந்து மக்களின் மனதில் நிற்கிறார் என்பதே புலப்படுகிறது.

‘ நித்தம் ஒரு குறள் நெட்டுறு செய்யின் உத்தமனாக உலகினில் வாழ்வாய்,’ என்றும் நம் தமிழில் தான் சொல்லப்பட்டு இருக்கிறது.

நாமும் திருக்குறளை கசடற கற்றும் கற்றப்படி நடக்கவும் திருவள்ளுவர் தினத்தன்று உணர வேண்டிய தருணமிது.

வாழ்க திருக்குறள்!! வாழ்க திருவள்ளுவர்!!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories