February 11, 2025, 4:35 PM
30.4 C
Chennai

முட்டையும் முட்டையும் சேர்ந்தா முட்டைன்னு இந்த மொட்டை சொல்றார்..!

தென்காசி புதிய மாவட்ட தொடக்க விழாவில் வரும் நவ.22ம் தேதி வெள்ளிக்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்காசியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். அந்த விழாவிற்காக செய்யப்படும் ஏற்பாடுகள் மற்றும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமையும் இடங்களை நேரில் அமைச்சர் ஆர் பி உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்!

அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் விழா குறித்த ஆலோசனைகளை அவர்கள் மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலட்சுமி, கூடுதல் தலைமைச் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்!

அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

வரும் 22ஆம் தேதி தென்காசி புதிய மாவட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சுமார் 5000 பயனாளிகளுக்கு 75 முதல் 100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்… என்றார்.

மேலும், 40 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி! சீன அதிபர், பாரத பிரதமரை அழைத்து வந்து முதல்வர் பழனிச்சாமி அதிசயங்கள் பல படைக்கிறார்… என்றார்.

தொடர்ந்து, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் மக்கள் நலனுக்காக இணைந்து பணி செய்ய தயாராக இருப்பதாகக் கருத்து தெரிவித்ததற்கு பதிலளித்த அவர், முட்டையும், முட்டையும் சேர்ந்தா அது முட்டை தான், ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்தால் தான் ரெண்டு! யாரு முட்டை யாரு ரெண்டு என நான் சொல்லவில்லை!

முட்டையும் முட்டையும் சேர்ந்தா அது முட்டை தான்! அத இந்த மொட்டை சொன்னார் எனப் போட்டுக் கொள்ளுங்கள் என்று புதிர் போட்டார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

Topics

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories