கடனுக்காக கடத்தல்: சில மணிநேரத்தில் மீட்பு!

kadathal 1 - 2026

சென்னை ராயப்பேட்டை, செல்லப்பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பைசுதீன்(48). தொழில் அதிபரான இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அண்ணாசாலையில் உள்ள தனியார் உணவகம் முன்பு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, கார் ஒன்று அவர்அருகே வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 5 பேர், பைசுதீனிடம் சிறிது நேரம் பேசினர். பின்னர் அவர்களில் ஒருவர்,பைசுதீன் மீது திடீரென தாக்குதல் நடத்தினார். அதைத் தொடர்ந்து அந்த கும்பல், அவரை வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளி கடத்தியது.

அதிர்ச்சி அடைந்த பைசுதீனின் நண்பர்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.இதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி தனிப்படை காவல்துறையினர் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே சென்று கொண்டிருந்த கடத்தல் காரர்களின் காரை சினிமா பாணியில் விரைந்து மடக்கிப் பிடித்தனர்.

அப்போது கடத்தல்காரர்கள், ஆய்வாளர் மோகன்தாஸ் மீது தாக்குதல் நடத்தினர். இருப்பினும் சாமர்த்தியமாகச் செயல்பட்டு பைசுதீனை தனிப்படை காவலர் மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறை கூறியதாவது: கடத்தல்காரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டது மதுரை நாகூர்தோப்பு கிழக்கு வேலியைச் சேர்ந்த ராஜா உசேன்(48), அவரது மகன்முகமது சைபுல்லா(27), கூட்டாளிகளான திருச்சியைச் சேர்ந்த ரஹ்மதுல்லா(25), ஆரிப்கான் (22), தவ்பிக்(22) என்பது தெரியவந்தது.

ALSO READ:  'அருந்தமிழ் 50' நூல் வெளியீடு

தொழிலை விரிவுபடுத்துவதற்காக பைசுதீன், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராஜா உசேனிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதை திருப்பிக் கேட்டபோது, பைசுதீன் கால அவகாசம் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ராஜா உசேனின் மகன் முகமது சைபுல்லா, பைசுதீன் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். அதைத் தொடர்ந்து அவரை கடத்தி உள்ளனர்.

ராஜா உசேன் மீது 1995-ல் சிந்தாதிரிப்பேட்டையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கு உள்ளது. இது சம்பந்தமாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு வாய்தாவுக்கு வந்தவர், கூட்டாளிகளுடன் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories