தென்காசியை அடுத்த திப்பணம்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி தொடர்
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் நாள் தோறும் புதிய நூதன உத்திகளை
கையாண்டு வருகின்றனர் இன்று 6 வது நாள் போரரட்டத்தில் குடிமகன்களை விளக்குமாறு
கொண்டு அடிக்கும் போராட்டம் நடத்தினர் இதில் மகளிடம் குடிக்க பணம் கேட்க்கும்
தந்தையை மகள் அடிப்பது போலவும் ,குடித்துவிட்டு வந்து பெண்களிடம் தகராறு
செய்யும் ஆண்களை பெண்கள் ஒன்று சேர்ந்து அடிப்பது போன்று உணர்ச்சிப்பூர்வமாக
பெண்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்
.