“அம்மா! நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன் என்று சொன்னாய்! அந்த ராஜயோகம் இதான்

246400 479182102136836 1433845875 n - 2026

“அம்மா! நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன்
என்று சொன்னாய்! அந்த ராஜயோகம் இதான் என்று
வைத்துக்கொள்ளேன்” என்றான்-சுவாமிநாதன்.

(யானை மாலை போட்டதால் சக்ரவர்த்தி ஆவான் என்று
நினைத்த தாய்க்கு சந்நியாசி பெரியவாளின் பதில் மேலே
​)

கட்டுரையாளர்-எஸ்.கணேச சர்மா
புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

மடத்திலிருந்து திடீரென்று ஒரு நாள் ஒரு தந்தி வந்தது.
குருநாதர் ஸாரத்தைவிட்டு ஆற்காட்டுக்கு அருகில் உள்ள
கலவை என்ற இடத்துக்குச் சென்று விட்டார்.

அங்கிருக்கையில்,’குழந்தை சுவாமிநாதனை அழைச்சுண்டு
உடனே மடத்துக்கு வரவும்!’ என்றது தந்தியின் வாசகம்.
அந்த சமயம் சுப்ரமண்யம் ஊரில் இல்லை.’மடத்திலிருந்து
தந்தி என்றால்,உடனே கிளம்புங்கள்!’ என்று மாதா
மகாலட்சுமியை ஊரார் தூண்டினர்.அவரும் எல்லாக்
குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்று,
அங்கிருந்து கலவைக்குச் செல்ல நினைத்தார்.

அதற்குள் தந்தி கொடுத்த பரமகுரு ஸித்தியாகி விட்டார்.
அவர் ஏன் தந்தி கொடுத்தார்? தான் மறையப்போவது தெரிந்தும்
அதற்குள் சுவாமிநாதனை அந்த பீடாதிபதியாக்க
வேண்டுமென்று அவசரப்பட்டார் போலும்! அது நடக்கவில்லை.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

எனவே, மடத்துக்காரர்கள் சுவாமிகள் இல்லாமல் மடம்
இருக்கமுடியாது என்று,கைங்கரியம் பண்ணிக் கொண்டிருந்த
லக்ஷ்மிகாந்தன் என்ற வேத வித்துக்கு சந்நியாசம் கொடுத்து
67-வது பீடாதிபதியாக நியமனம் பண்ணிவிட்டனர்.

‘சுவாமிநாதன் மடாதிபதியாக்க வேண்டும்!’ என்ற குருவின்
ஆசையைத் தெரிந்து வைத்திருந்த இந்த 67-வது பீடாதிபதி,
தான் அந்த இடத்துக்கு வந்துவிட்டாலும், குரு நினைத்த அதே
சுவாமிநாதன் தான் இந்த இடத்துக்கு உரியவர் என்று
நினைத்ததுபோல் எட்டாம் நாளே ஸித்தியாகிவிட்டார்.அதற்கு
முன்,”சுவாமிநாதனை உடனே அழைத்து வாருங்கள்” என்று
சொல்லி வண்டியுடன் ஆள் அனுப்பினார். மடத்துக்காரர்கள்
காஞ்சிபுரம் சென்று சுவாமிநாதனை அழைத்துக்கொண்டு
வந்தனர்.

பின்னாலே பெற்றோர் கலவைக்குச் சென்று நிலைமையை
அறிந்தார்கள்.செல்லப் பிள்ளையைக் கொடுக்க எந்த அப்பா,
அம்மா சம்மதிப்பார்கள். அதனால் அம்மாவை
சமாதானப்படுத்தவே முடியவில்லை. பெற்றெடுத்த
அம்மாவை சுவாமிநாதனே சமாதானப்படுத்தினார்.

சில நாட்களுக்கு முன் இந்த அதிசயக் குழந்தைக்கு ஒரு
யானை வந்து மாலை போடுவதுபோல் சொப்பனம். யானை
பெரிய சக்ரவர்த்திகளுக்குத்தானே மாலை போடும்?
பிள்ளையின் கனவைப் பற்றிக் கேள்விப்பட்ட அன்னை
அப்படித்தான் நினைத்துப் பூரித்தாள். “என் கண்ணே…”
என்று சுற்றிப் போட்டாள் குழந்தை அம்மாவுக்கு அந்தக்
கனவை நினைவூட்டினான்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

“அம்மா! நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன்
என்று சொன்னாய்! அந்த ராஜயோகம் இதான் என்று
வைத்துக்கொள்ளேன்” என்றான்.பெரியவாளிடம் பேசி
ஜெயிக்க முடியுமா என்ன? பெற்றோர் மௌனமாகச்
சம்மதம் கொடுத்தனர்.

பராபவ வருடம் மாசி மாதம் 2-ம் தேதி அதாவது 1907-ம்
வருடம் பிப்ரவரி மாதம் 13-ம் தேதி, ஸ்ரீமத்
சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற திருநாமத்துடன்
அவருக்கு சந்நியாச ஆசிரமம் கொடுக்கப்பட்டது. பிறகு
தன் குரு,பரமகுரு இருவருக்கும் செய்ய வேண்டிய
காரியமெல்லாம் கிரமமாகச் செய்து முடித்த பின்
கும்பகோணம் சென்றார். அங்கு அவருக்கு காஞ்சி
காமகோடி பீடாதிபதியாகப் பிலவங்க வருடம் சித்திரை
மாதம்,27-ம் தேதி, குருவாரம் பட்டாபிஷேகம்
செய்யப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories