இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

election voting - 2026

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகுிறது. எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு, தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடி என உள்ளது. 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில், சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை ஒட்டி வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை, தலைமை தேர்தல் ஆணையம் 2025ல் தொடங்கியது. இதற்காக எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெற்றது. 

இதன் பின்னர் டிசம்பர் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, 2025 அக்டோபர் மாத நிலவரப்படி, 6.41 கோடியாக இருந்த வாக்காளர்களில், 97.30 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். அதன்பின்  5.43 கோடி பேர் மட்டுமே பட்டியலில் இருந்தனர்.  

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் செய்யவும் கடந்த 10ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பெயர் சேர்க்க 22.8 லட்சம் மனுக்கள்; பெயர் நீக்க 2 லட்சம்; திருத்தம் செய்ய 9.90 லட்சம் மனுக்கள் என மொத்தம் 34.7 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இதை அடுத்து, அந்த மனுக்களை பரிசீலித்து, இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. 

மாவட்டத் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான  மாவட்ட ஆட்சியர்கள் இன்று பட்டியலை வெளியிட்டனர். அதன்படி,

தென்காசி: தென்காசி மாவட்டத்தின் 5 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 12,64,411 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 6,18,063 பேரும், பெண் வாக்காளர்கள் 6,46,180 பேரும், மூன்றாம் பாலினம் 168 பேரும் உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று 23ம் தேதி மாவட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தலைமையில் வெளியிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  வாக்காளர்கள் எண்ணிக்கை- 11,92,194 காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,76,299 வாக்காளர்களும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,96,052 வாக்காளர்களும் உள்ளனர். ஸ்ரீபெரும்புதூர்- 3,75,921, உத்திரமேரூர்- 2,43,922, ஆலந்தூர்- 2,9,052 வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை- 15,10,550 ஆக உள்ளது,. இவர்களில், ஆண்கள்- 7,51,016 ; பெண்கள்- 7,59,390 ; 3ம் பாலினம்- 144

* தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் இளம் பகவத் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தின் 6 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் படி, வாக்காளர்கள் எண்ணிக்கை- 13,6,624. ஆண்கள்- 6,71,742 பெண்ள்- 7,0,689 3ம் பாலினத்தவர்-193 வாக்காளர்ள் உள்ளனர்.

*செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை- 22,60,03 ஆண்கள்- 11,04,511 பெண்கள்- 11,55,144, 3ம் பாலினம்- 381 வாக்காளர்கள் உள்ளனர். 

* விருதுநகர் மாவட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியல் படி, வாக்காளர்கள் எண்ணிக்கை- 14,97,417. ஆண்கள்- 7,28,539 பெண்கள்- 7,68,62 3ம் பாலினம்- 246 வாக்காளர்கள் உள்ளனர்.

* நாமக்கல் மாவட்டத்தில், 6 சட்டசபை தொகுதிகளில், ஆண் வாக்காளர்கள், 6,35,299, பெண் வாக்காளர்கள், 6,75,452, இதரர், 200, மொத்தம்: 13,10,951. நீக்கம் செய்யப்பட்டவர்கள், 1,43,321 பேர்.

* சிவகங்கையில் ஆண் வாக்காளர்கள் -5,44,035, பெண் வாக்காளர்கள்- 5,66,526, மூன்றாம் பாலினத்தவர்கள்-38, மொத்த வாக்காளர்கள்-11,10,599.

* சேலத்தில் ஆண் வாக்காளர்கள் – 13,70,962, பெண் வாக்காளர்கள்- 13,84,548, மூன்றாம் பாலினத்தவர்கள்-320, மொத்த வாக்காளர்கள்-27,55,830.

* திருச்சியில் ஆண் வாக்காளர்கள் – 10,31,354, பெண் வாக்காளர்கள்- 10,94,642, மூன்றாம் பாலினத்தவர்கள்-307, மொத்த வாக்காளர்கள்-21,26,303.

* கடலூரில் ஆண் வாக்காளர்கள் – 9,91,527, பெண் வாக்காளர்கள்- 10,23,979, மூன்றாம் பாலினத்தவர்கள்-293, மொத்த வாக்காளர்கள்-20,15,196.

* மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 7,29, 216, இதில் ஆண் வாக்காளர்கள் 3,60,493, பெண் வாக்காளர்கள் 3,68,676, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 47 பேர் இடம் பெற்றுள்ளனர்.

* கோவையில் ஆண் வாக்காளர்கள் – 13,00,889, பெண் வாக்காளர்கள்- 13,95,396, மூன்றாம் பாலினத்தவர்கள்-528, மொத்த வாக்காளர்கள்- 26,96,813.

* சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எண்ணிக்கை- 27,55,830. ஆண்கள்-13,84,548 பெண்ள்- 13,70,962 3ம் பாலினத்தவர்- 320 பேர் உள்ளனர்.

தொடர்ந்து மாவட்டம் வாரியான புள்ளி விவரங்கள் வெளியாகி வருகின்றன. மாநிலம் முழுதும் உள்ள இறுதி வாக்காளர் விவரங்களை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிடுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories