T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

icc t20 worldcup - 2026

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி
சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          இம்மாதம் 20ஆம் தேதியோடு முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. 19.02.2026 கொல்கொத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் காலை 1100 மணிக்கு நடந்த இத்தாலி, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் மே.இ. தீவுகள் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.  கொழும்புவில் இலைங்கை ஜிம்பாபே அணிகளுக்கு இடையே மதியம் 0300 மணிக்கு நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஜிம்பாபே 6 விக்கட்டுகள் வித்தியாசதில் வென்று குரூப் B பிரிவில் முதலிடத்தைப் பெற்றது. சென்னையில் இரவு 0700 மணிக்கு ஆஃப்கானிஸ்தான் கனடா அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் 82 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 20.02.2026 அன்று நடந்த கடைசி முதல் சுற்று ஆட்டத்தில், கண்டி, பல்லகெலே மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி ஓமன் அணியை 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

          சூப்பர் 8 ஆட்டங்களுக்காக முதல் சுற்றில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்கள் பெற்ற அணிகள் இரண்டு குரூப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் 1 – இந்தியா, ஜிம்பாபே, மேற்கு இந்தியத்தீவுகள், தென் ஆப்பிரிக்கா

குரூப் 2 – பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

          இதில் முதல் ஆட்டம் 21.02,2026 அன்று கொழும்புவில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்தது. ஆனால் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படவில்லை. அதனால் ஆட்டம் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

          22.02.2026 அன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. பல்லகலேயில் மதியம் 0300 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, இலங்கை அணியை 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஆட்டம் அகமதாபாத்தில் இரவு 0700 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, இந்திய அணிகளுக்கு இடையே நடந்தது. பூவாதலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. தொடக்கத்தில் மூன்று மட்டையாளர்களை இழந்த அந்த அணி அதன் பின்னர் சுதாரித்துக்கொண்டு, சிறப்பாக ஆடியது. எய்டன் மர்க்கரம் (4 ரன்), க்விண்டன் டி காக் (6 ரன்), ரியன் ரிக்கிள்டன் (7 ரன்) ஆகிய மூவரும் அர்ஷதீப் சிங், பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் டிவால்ட் ப்ரூவிஸ் (45 ரன்), டேவிட் மில்லர் (63 ரன்) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (44 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கட் இழப்பிற்கு 187 ரன் எடுத்தது. பும்ரா மூன்று விக்கட்டுகள் எடுத்தார்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

          இரண்டாவதாக ஆடவந்த இந்திய அணியில் இஷான் கிஷன் (பூஜ்யம் ரன்), அபிஷேக் ஷர்மா (15 ரன்), திலக் வர்மா (1 ரன்), சூர்யகுமார் யாதவ் (18 ரன்), வாஷிங்டன் சுந்தர் (11 ரன்) என வரிசையாக அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.  சிவம் துபே (42 ரன்) சற்று நிலைத்து ஆடினார். ஹிருதிக் பாண்ட்யா (18 ரன்) அவருக்கு கொஞ்ச நேரம் கம்பனி கொடுத்தார். ரிங்கு சிங் 2 பந்துகளில் பூஜ்யம் ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 18.5 ஓவர்களில் அனைத்துவிக்கட்டுகளையும் இழந்து 111 ரன் எடுத்தது. எனவே தென் ஆப்பிரிக்க அணி 76 ரன் களில் அபார வெற்றி பெற்றது.

          இன்று (23.02.2026) மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் பூவாதலையா வென்ற ஜிம்பாபே அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் மட்டையாட வந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் (9 ரன்) மற்றும் ஷாய் ஹோப் (14 ரன்) விரியவில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் களமிறங்கிய ஹெட்மயர் (85 ரன்) மற்றும் ரோமன் போவெல் (59 ரன்) இருவரும் அதிரடியாக ஆடினர். அவர்களுக்குப் பின்னர் ஆடவந்த ரூதர்போர்ட் (31 ரன்), ஷெப்பர்ட் (21 ரன்), ஜேசன் ஹோல்டர் (13 ரன்) ஆகியோரும் அதிரடி ஆட்டத்தைத் தொடர, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கட் இழப்பிற்கு 254 ரன் எடுத்தது. இது டி20 உலகக் கோப்பை ஆட்டங்களிலேயே இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்த உலகக் கோப்பை ஆட்டங்களில் இதுவே அதிகமான ஸ்கோர். இந்த 254 ரன்களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 19 சிக்சர்கள் அடித்தது.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

          இரண்டாவதாக ஆடிய ஜிம்பாபே அணி 17.4 ஓவர்களில் 147 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதனால் மே.இ. தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நாளை (24.02.2026) இரவு 0700 மணிக்கு இலங்கை கண்டியில், பல்லேகலே மைதானத்தில் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆட்டம் நடைபெறுகிறது.   

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories