December 6, 2025, 7:17 AM
23.8 C
Chennai

செங்கோட்டை பூங்காவில் நுழைவுக் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு; கவுன்சிலர்கள் மனு!

manu to segottai municiality - 2025

செங்கோட்டை முத்துசாமி பூங்காவிற்கு வரும் பொதுமக்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை கைவிடக் கோரி அதிமுக., பாஜக., கவுன்சிலா்கள் மனு அளித்தனர்.

செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்க தடை கோரி அதிமுக, பாஜக கவுன்சிலா்கள் நகராட்சி மேலாளா் கண்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

செங்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான முத்துசாமி பூங்காவிற்கு செங்கோட்டை தீர்மான எண் 200 நாள் 05.10.2023இன்படி நகராட்சி வருவாயினை அதிகப்படுத்தும் நோக்கில் முத்துசாமி பூங்காவிற்கு வரும் பொதுமக்களிடமிருந்து நுழைவுக் கட்டணத் தொகை வசூலிக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 தினங்களுக்குள் ஆட்சேபணை முரண்பாடுகள் இருந்தால் ஆணையாளா் செங்கோட்டை நகராட்சியில் எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் தெரிவிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்படி தீர்மானமானது பெரும்பான்மையான உறுப்பினா்களால் ஆரம்ப கட்ட நிலைலேயே நிராகரிக்கப்பட்ட தீரமானம் ஆகும்.

அவ்வாறு நிராகரிக்கப்பட்ட தீர்மானத்தினை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என பொய்யாக நாளிதழில் செய்தி வெளியிட்டு இருப்பது மிகவும் கண்டத்திற்குரியது ஆகும். இதற்கு எங்களது கண்டனத்தினை மிக கடுமையாக தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் பூங்காவில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வருவாயை விட அதிகமான அளவு வணிக வளாகங்களின் மூலம் பெறலாம். நகராட்சி வருவாயை பெருக்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கும்பட்சத்தில் பொதுமக்களிடம் ரூ.5ஐ வசூலிப்பது பொதுமக்களை மேலும் சிரமத்திற்குள்ளாக்குவது போன்ற செயலாகும்.

மேலும் சொத்துவரி, உயர்வு மின்கட்டண உயர்வு போன்ற பல்வேறு கட்டண உயர்வுகளினால் பொதுமக்கள் அவதிபட்டு வரும் இந்நேரத்தில் பூங்காவிற்கு நுழைவு கட்டணம் வசூலிப்பது பொதுமக்கள் மற்றும் சிறுவா், சிறுமியா், மாணவ, மாணவியர், முதியோர் பெரும் சிரமத்திற்குள்ளாக்குவது போன்றது ஆகும்.

மேலும் மாணவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் பொதுமக்கள் என அனைவரும் சிலமணி நேரம் பூங்காவில் செலவிடுவார்கள் அதற்கும் நுழைவு கட்டணம் என்ற பெயரில் கட்டணம் வசூலிப்பது ஒரு கொடிய செயலாக கருதுகிறோம்.

ஏற்கெனவே தமிழக அரசு மக்களை பல்வேறு வரி உயர்வுகள் செய்து மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வரும் நிலையில் இந்நகராட்சியின் பூங்காவிற்கு வரும் மாணவர்கள், முதியோர்கள், குழந்தைகளையும் மிகுந்த இன்னல்களுக்கும் சிரமத்திற்குள்ளாக்க வேண்டாம் என பொதுமக்களின் நலன் கருதி மேற்படி பூங்காவிற்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் நடைமுறைப்படுத்த வேண்டாம் என மிக கடுமையான ஆட்சேபனை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் முத்துசாமி பூங்கா தோற்றுவிக்கப்பட்ட நாளிலிருந்து நாளது தேதிவரையில் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்காமல் இலவச பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் திடீரென நுழைவு கட்டணம் வசூலிக்கும் நடைமுறையினை உருவாக்கி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டாம் எனவே மேற்படி பூங்காவிற்கு நுழைவு கட்டணம் வசூலிக்க இருக்கும் திட்டத்தினை உடனடியாக கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில், நகர்மன்ற துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், சுப்பிரமணி, ஜெகன், முத்துப்பாண்டி, சரஸ்வதி, சுடர்ஒளி, பாஜக கவுன்சிலா்கள் வேம்புராஜ், செண்பகராஜன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவா் கணேசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் தங்கவேலு ஆகியோர் கலந்து கொண்டனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories