சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ ஒரு 62 வயது மூதாட்டியினுடையது. இவர் தோட்டாவின் வேகத்தில் மலை ஏறுவதை வீடியோவில் காண முடிகின்றது.
பாட்டிக்கு பின்னால் நிற்கும் இளைஞர்கள் அவர் வேகமாக மலை ஏறுவதை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பாட்டியின் வேகமும் துடிதுடிப்பும் அனைவரையும் வியக்க வைக்கிறது.
தினசரி பணிகளை செய்வதற்கே இளைஞர்களுக்கு சோம்பேறித்தனம் வரும் இந்நாட்களில் இந்த பாட்டியின் வேகமும் சுறுசுறுப்பும் மக்களை ஆச்சரியப்படுத்துகின்றது.
ஆச்சரியமளிக்கும் இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. ஏராளமான நெட்டிசன்கள் இதை லைக் செய்துள்ளனர்.
சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவில், மலை உச்சியில் ஒரு ஆணும், கீழே பாட்டியும் நிற்பதைக் காண முடிகிறது. பார்த்துக்கொண்டிருக்கும் போதே, பாட்டி, கயிற்றின் உதவியுடன் கிடுகிடுவென மலை ஏறுகிறார்.
பாட்டி மலை ஏறுவதைப் பார்த்தால், அவருக்கு இவ்வளவு வயதானதே தெரியவில்லை. இளைஞர்களுக்கான சுறுசுறுப்புடன் அவர் மலை ஏறுகிறார்.
இந்த வீடியோ பிப்ரவரி 16-ம் அன்று எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. பெங்களூருவை சேர்ந்த அந்த பாட்டி தனது மகன் மற்றும் அவர்களது நண்பர்களுடன் கேரளாவில் உள்ள சஹ்யாத்ரி மலைத்தொடரின் உச்சியில் ஏறுவதற்காக வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது என தெரியவந்துள்ளது.
வெற்றிகரமாக ஏறிய பிறகு, கடந்த நாற்பது ஆண்டுகளாக தான் குடும்பப் பொறுப்பில் பிஸியாக இருந்ததாக பாட்டி கூறினார். தற்போது தனது மகன்கள் வளர்ந்து செட்டில் ஆகி விட்டதால், இனி தனது கனவுகளை நிறைவேற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாட்டி ஏறி முடித்த மலை 1868 மீட்டர் உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் இருந்து, இது படு சூப்பராக இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.
நெட்டிசன்களும் பாட்டியை பாராட்டி பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் Timeofkarnataka என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.