கிரிக்கெட் உலகின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் உடல் மொழியில் ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார்.
தண்ணீர் வீணாவதை தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள சச்சின், குழாயில் தண்ணீர் லீக் ஆகாமல் இருக்கும் படி மூடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வீடியோவில், ” ஒவ்வொரு துளியும் முக்கியமானது, குழாயைத் திறப்பது போன்று, அதனை இறுக்கமாக மூடுவதும் அவசியம்” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக இருந்த சச்சின் ஒய்வு பெற்ற பிறகு, மும்மை இந்தியன்ஸ் அணியில் சிறிது காலம் விளையாடினார். அதன் பின் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.