January 18, 2025, 6:18 AM
23.7 C
Chennai

திருப்புகழ் கதைகள்: பூதனை வரலாறு!

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 180
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கருவின் உருவாகி – பழநி
ஓங்கி உலகளந்த உத்தமன் 2

திரிவிக்கிரமனான திருமால் பூ மண்டலம் முழுவதையும் ஓரடியாலும், சுவர்க்கலோகத்தை ஓரடியாலும் அளந்தார். மூன்றாவது அடிக்கு அணுவளவும் இடமில்லாமற் போயிற்று. பகவான், ‘பலியே! உன் சொல்லை நிறைவேற்றுவாயாக. அசத்தியன் நரகிற் சொல்லுவான். மூன்றாவது அடிக்கு இடம் எங்கே?” என்று கேட்க, பலி “தேவசிரேட்டரே! என்னுடைய சொல் பொய்க்காவண்ணம் உமது திருவடியை அடியேனது சென்னியில் வைத்தருள்வீர். நரகத்தை அனுபவிப்பதாயினும் சொன்னதை மாத்திரம் தவற மாட்டேன்” என்றான்.

அப்போது பிரகலாதர் தோன்றி பெருமானை வணங்கி, “பலி உம்மால் காப்பாற்றத்தக்கவன்” என்றார். பலியின் மனைவியாகிய விந்தியாவலி, “எம்மை என்றும் காக்கவல்லவர் நீரே; உலக பரிபாலன மூர்த்தியாகிய நீர் உமது இயற்கையான கருணையால் காத்தருள்வீர்” என்றாள்.

பிரமதேவர் “எம்பெருமானே! சர்வ சொத்தையும் உமக்கு சமர்ப்பித்த இந்தப் பலியை விட்டுவிடும். இவன் காக்கத்தக்கவன். அறுகம் புல்லையும் சிறிது நீரையும் கொண்டு பூசித்தவன் உத்தமமான கதியை அடைகின்றான். இந்தப் பலியோ உமக்கு மூன்று உலகங்களையும் கொடுத்தவன். இவனை ஆண்டருள்வீர்” என்றார்.

பகவான் “அன்புடைய பலியே! நீ சுதல லோகத்தில் சுகமாக இருப்பாயாக; உனது வாசலில் நான் எப்போதும் இருந்து உன்னைக் காப்பாற்றுவேன். உனக்கு நன்மை உண்டாகக் கடவது. இனி வரப்போகிற காவர்ணி மனுவந்திரத்தில் நீ இந்திரனாகப் போகிறாய். நீ எப்போதும் என்னைத் தெரிசித்துக் கொண்டு இருப்பாயாக” என்று அருள் புரிந்தார். பலியை சுதல உலகத்தில் இருத்தி, பகவான் அமரர்கட்கு அமராவதியைக் கொடுத்து, அதிதியை மகிழ்வித்து இந்திரனுக்குத் தம்பியென்னும் முறையில் உபேந்திரனாகி விளங்கினார்.

ALSO READ:  மதுரை கோயில்களில் சனி மகா பிரதோஷம்: திரண்ட பக்தர்கள்!

“துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடு
துலக்க அரிதிரு முருகோனே” —( முடித்த) திருப்புகழ்

“வடிவுகுறளாகி மாபலியை
வலியசிறையிட வெளியின் முகடு கிழிபடமுடிய
வளருமுகில்” — சீர்பாத வகுப்பு.
…..“படி மாவலிபால்
மூவடி கேட்டு அன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான்” — கந்தர்அலங்காரம்.

onam vamana story2
onam vamana story2

பூதனை வரலாறு

வாமனர் யாகசாலைக்கு வரும்போது அவரைப் பார்த்த மகாபலிச் சக்ரவர்த்தியின் மகள் இரத்தினமாலாவுக்கு உள்ளத்தில் – ஐயோ இந்தப் பிள்ளைக்குத் தாயாக இருந்து நான் இவனை அணைத்துத் தாய்ப்பால் அளிக்கும் பாக்கியம் கிடைக்காதா என எண்ணினாள்.

அதே சமயம் வாமனர் திரிவிக்ரமனாக உருவெடுத்து உலகளந்த பின்னர் பலியின் தலையில் கால் வைத்து அவனை சுதல் லோகத்திற்கு அழுத்தியபோது, இவனுக்கு விஷம் கொடுத்து இவனை நான் கொல்ல மாட்டேனா? என எண்ணினாள்.

இவளே கிருஷ்ணாவதாரத்தில் பூதனையாக வந்து கிருஷ்ணருக்கு முலைப்பால் கொடுக்க முயன்று, அதன் மூலம் விஷம் கொடுத்த பூதனை என்ற அரக்கியாவாள். அவளுடைய இரண்டு விருப்பத்தையும் பகவான் பூர்த்தி செய்தார்.

ALSO READ:  கும்பமேளா செல்ஃபி, அரசியலமைப்பு 75ம் ஆண்டு... மனதின் குரலில் பிரதமர் மோடி!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை