பப்ஜி மொபைல் போன் விளையாட்டுக்கு அடிமையாகி விட்டார் தோனி. அவர் தூக்கத்தில் கூட புலம்புகிறார் என்று அவரது மனைவி சாக்ஷி இன்ஸ்டா சேட்டில் வருத்தப் பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் மாற்றத்துக்கான விதையை ஊன்றியவர் என்று பாரட்டப் படும் மகேந்திர சிங் தோனி, தற்போது மற்ற கிரிக்கெட் வீரர்களைப் போல் கூட இல்லாமல், இந்தக் கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு நேரத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாக்ராமில் கூட வருவதில்லை.
தன் வீட்டில் குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வரும் அவர் மொபைல் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறாராம்.
சென்னை சூப்பர் கிங்க்ஸ்அணியின் அதிகாரபூர்வ ‘இன்ஸ்டாகிராம்’ இணையதளத்தில், தோனியின் மனைவி சாக்ஷி உரையாடினார். அப்போது தோனி வீட்டில் என்ன செய்கிறார் என்று கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்த சாக்ஷி, தோனி எதையும் நன்கு யோசிக்கக் கூடியவர். அந்த மூளை எப்போதும் சும்மா இருக்காது. வீடியோ ‘கேம்’ விளையாடுகிறார். இது அவரது மனசை திசைதிருப்ப உதவுகிறது. இப்போதெல்லாம் தோனியின் பப்ஜி விளையாட்டு, எனது படுக்கையை ஆக்கிரமித்து விட்டது. தூக்கத்தில் கூட பப்ஜி குறித்தே அதிகம் பேசுகிறார்… என்று கூறினார்.
எம்.எஸ். தோனியை சமூகத் தளங்களில் பின்தொடர்பவர்களுக்கு நன்றாகத் தெரியும், முன்னாள் இந்திய கேப்டன் ஒரு வீடியோ கேம்களின் பெரும் ரசிகர் என்று! அதிலும் குறிப்பாக PUBG விளையாட்டின் தீவிர ரசிகர் என்பது. PUBG விளையாட்டுடன் தோனிக்கு இருக்கும் தீவிர பற்று குறித்து அவரது அணியினர் கூட அடிக்கடி பேசியிருக்கிறார்கள்.
“அவருக்கு என்று ஒரு சிந்தனை மூளை உள்ளது, அது ஓய்வெடுக்காது. அவர் வீடியோ கேம்களை விளையாடும்போது, அவரது மனதைத் திசைதிருப்ப உதவுகிறது! இது ஒரு நல்ல விஷயம்தான். இப்போது PUBG என் படுக்கையை ஆக்கிரமி விட்டது. மஹி இந்த நாட்களில் PUBGயைப் பற்றியே அதிகம் பேசுகிறார்! என்று, சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஒரு நேரடி வீடியோ அமர்வின் போது சாக்ஷி, ரூபா ரமணியிடம் கூறினார்.
ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காலத்திலும், வேறு கிரிக்கெட் நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாத காலத்திலும் எம்.எஸ்.தோனி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டதற்கு, சி.எஸ்.கே கேப்டன் தோனி, பைக்குகளை அசெம்பிள் செய்து வருகிறார் என்றார் சாக்ஷி.
மஹியிடம் 9 பைக்குகள் உள்ளன. அவர் அவற்றின் பாகங்களைக் கழற்றி, புதிய பாகங்கள் வாங்கி அவற்றை மீண்டும் அசெம்பிள் செய்து நேரம் போக்குவார் . அவர் ஒரு பைக்கை அசெம்பிள் செய்து அதை முழுமையாக முடித்து எடுத்துச் சென்றார், ஆனால், அதில் ஒரு பகுதியை சேர்க்க மறந்துவிட்டார், இருப்பினும் மறுநாள் அவர் அந்த பைக்கை மீண்டும் திறக்க வேண்டியிருந்தது, அதையெல்லாம் அவர் மீண்டும் அசெம்பிள் செய்தார், ” என்றார் சாக்ஷி.
தோனி எந்த விஷயத்திலும் அமைதியாகவே இருப்பார். நான் மட்டுமே அவரை ‘அப்செட்’ செய்ய முடியும். அவரது கோபத்தைத் தூண்ட முடியும். இதனால் அவர் என் மீது கோபத்தை வெளிப்படுத்துவார். ஏனெனில் நான் மட்டுமே அவருக்கு நெருக்கமானவராக உள்ளேன்
“உங்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகியிருக்கும்போது, ஒருவருக்கொருவர் உள்ளேயும் வெளியேயும் நன்றாகத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். யாரும் அவருடன் சண்டையிடுவதில்லை. நான் மட்டுமே.”என்றார் சாக்ஷி.