பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் கராச்சி தொகுதியில் போட்டியிட முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான்கான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
342 தொகுதிகளைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வரும் ஜூலை 25 -ஆம் தேதில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதில் கராச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக, பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இம்ரான் கான் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அவரது கட்சியின் மூத்த தலைவர் ஆசாத் உமர் (Asad Umar) தெரிவித்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு தேர்தலில் இம்ரான் கான், ராவல்பிண்டி, மியான்வலி, பெஷாவர், லாகூர் (Rawalpindi, Mianwali, Peshawar, Lahore) ஆகிய தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.