தில்லியில் உள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இன்று காலை மரியாதை செலுத்தினர்.
மேலும், வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப் படுகிறது. இதை முன்னிட்டு தில்லியில் அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் மோடி குறிப்பிட்டது…
Remembering Atal Ji on his Punya Tithi. His thoughts and words live on. We will always cherish his contribution to India’s development.
Paid tributes to Atal Ji at Sadaiv Atal this morning. pic.twitter.com/RRZFnlcfTT
— Narendra Modi (@narendramodi) August 16, 2019