வீணை என்று சொன்னதுமே எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவு தான் வரும். ஆனால், 32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இதோ தெய்வங்களும் அவர்களுக்குரிய வீணையின் பெயர்களும்:
- பிரம்மதேவனின் வீணை – அண்டம்.
- விஷ்ணு – பிண்டகம்.
- ருத்திரர் – சராசுரம்.
- கௌரி – ருத்ரிகை.
- காளி – காந்தாரி.
- லட்சுமி – சாரங்கி.
- சரஸ்வதி – கச்சபி எனும் களாவதி.
- இந்திரன் – சித்திரம்
- குபேரன் – அதிசித்திரம்
- வருணன் – கின்னரி.
- வாயு – திக்குச்சிகையாழ்.
- அக்கினி – கோழாவளி.
- நமன் – அஸ்த கூர்மம்.
- நிருதி – வராளி யாழ்.
- ஆதிசேடன் – விபஞ்சகம்.
- சந்திரன் – சரவீணை
- சூரியன் – நாவீதம்.
- வியாழன் – வல்லகி யாழ்
- சுக்கிரன் – வாதினி.
- நாரதர் – மகதி யாழ் ( பிருகதி )
- தும்புரு – களாவதி ( மகதி ).
- விசுவாவசு – பிரகரதி.
- புதன் – வித்யாவதி.
- ரம்பை – ஏக வீணை.
- திலோத்தமை – நாராயணி.
- மேனகை – வணி.
- ஊர்வசி – லகுவாக்ஷி
- ஜயந்தன் – சதுகம்.
- ஆஹா,ஊஹூதேவர்கள் – நிர்மதி
- சித்திரசேனன் – தர்மவதி ( கச்சளா ).
- அனுமன் – அனுமதம்
- ராவணன் – ராவணாசுரம்