சென்னை:
பன்னீர்செல்வத்துக்கு தனது ஆதரவு என்று தெரிவித்துள்ளார் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர்.
முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளை சட்டசபையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசுக்கு எதிராக மயிலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ் வாக்களிப்பேன் என்று கூறியதாக தகவல் பரவியது. ஆனால் நட்ராஜ் தரப்பில் சரியான பதில் ஏதும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நட்ராஜ் பேசுகையில்,
இது போன்ற பிரிவினை ஓட்டெடுப்பு என்பதில் உடன்பாடு இல்லை. இரு பிரிவினரையும் இணைக்க முயற்சிப்பேன். அதிமுக ஓ.பி.ஸ்., தலைமையில் இயங்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். என் தொகுதி மக்களின் எண்ணமும் அதுதான். நேர்மையும், சத்தியமும் எனது உணர்வு. மக்கள் உணர்வுகளை மதிப்பேன். நான் ஓ.பி.எஸ்சு.,க்கு ஆதரவாக ஓட்டளிப்பேன் என்பது உண்மை.
– என்று கூறினார்.