December 5, 2025, 4:09 PM
27.9 C
Chennai

நாட்டு நடப்பு: தீர்ப்பும் அரசியல் கட்சிகளும்

     சொத்துக் குவிப்பு வழக்கில்  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது இல்லத்தில் அவருக்கு உதவியாக இருந்த சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை குற்றவாளிகளாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
     இந்தத் தீர்ப்பை பல அரசியல் கட்சிகள் நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று கொண்டாடி வருகின்றனர்.
     தி.மு.க.வும் தாங்கள் ஒரு புனித புத்தர் போலத் தங்களைக் காட்டிக் கொண்டு இது ஊழலுக்கு எதிரான நல்ல தீர்ப்பு என்று அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
     தனது சகோதரி கனிமொழி, 2G ராஜா, மாறன் சகோதரர்கள், மற்றும் இன்னும் எத்தனையோ ஊழல் பெருச்சாளிகளையும், எலிகளையும், சிறுசிறு பூச்சிகளையும் தன் மடியில் கட்டிக் கொண்டுதான் அவர் இப்படிச் சொல்லுகிறார். தனது சகோதரர் மு.க அழகிரி செய்த அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமா. அவரது கழகத் தலைவர் தி(ரு).மு.கருணாநிதியே ஊழலின் ஊற்றுக் கண்தானே. சர்க்காரியா கமிஷனே அவரது ஊழலை “விஞ்ஞான முறையில் செய்த ஊழல்” என்று சிறப்புப் பட்டமே கொடுத்ததே.மக்களின் மறதி உங்களைப்போன்ற அரசியல் வியாதிகளுக்கு ஊக்க மருந்தாக இருக்கிறது. நீங்கள் எல்லோரும் பகுத்தறிவாளர்களாக வேடம் போட்டாலும் தெய்வம் நின்று கொல்லும் என்பது சத்தியம். தவறு செய்தவர்கள் வலியில்லாமல் செத்தது கிடையாது என்னும் போது தப்பு செய்தவர்களுக்கு இறைவன் தண்டனை எப்படி இருக்கும் என்பது ஒவ்வொரு முறையும் காலம் நிரூபித்துக் கொண்டு வருகிறது. (“தவறு என்பது தவறிச் செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது”…பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்).
     இப்போதிருக்கும் காங்கிரஸ் ஊழலிலேயே ஊறிக்கிடக்கிறது. அவர்களுக்கு திரு. கே.காமராஜரின்  பெயரை உச்சரிக்கவே யோக்கியதை கிடையாது.
     மற்ற உதிரிக் கட்ச்சிகள் எல்லாம் ஊழல் கட்சியான அ.இ.அ.தி.மு.க., தி.மு.க.வின் கூட்டணிக்காகக் கதவைத் தட்டித்தட்டி காப்பி, டீ, குடித்தவைதான்.
     இந்த மிகப் பெரிய ஊழல் ஆலமரம் தானே வளரும் என்றாலும், தன் பங்கிற்குத் தண்ணீர் ஊற்றி வளர்த்தவர் திரு. சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சார்யார் என்ற இராஜாஜி அவர்கள் என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அவர்தான் 1967ம் வருடப் பொதுத்தேர்தலில் தனது சுதந்திராக் கட்சியை தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து,”நான் சொல்லுகிறேன் நீங்கள் இந்தக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று தன் மார்பில் உள்ள பூணூலைத் தொட்டு தமிழக மக்களிடம் ஓட்டுக் கேட்டார்”. அப்பொழுதே கரையான் புற்றில் கருநாகம் புகுந்து விட்டது. அதன் பலனை இன்றும் நாம் அனுபவிக்கிறோம்.
     இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உண்மையிலேயே நெஞ்சில் உரமும், நேர்மையும், எளிமையும் கொண்ட நல்ல தலைவர்கள் வருவார்கள்.அவர்களின் தலைமையில் தமிழ்நாடு தன்னுடைய அவமானங்களைத் துடைத்துத் தூய்மை பெரும்.
    அம்மாவின் ஆட்சியும் வேண்டாம், அப்பாவின் ஆட்சியும் வேண்டாம். சுயநலம் இல்லாத நல்லவர்கள் ஆட்சியே வேண்டும்.
கட்டுரை: மீ.விஸ்வநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories