சென்னை:
காஞ்சிபுரத்துக்கு வருகை தந்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, இன்று மாலை காமாட்சியம்மன் கோயிலில் அம்மனை வழிபட்டார். காஞ்சிபுரம் வந்திருந்த அவரை மாவட்ட ஆட்சியர் பொன்னையா வரவேற்றார்.
காஞ்சிபுரம் சங்கரமடத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வரவேற்றார். தொடர்ந்து ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து அவர் ஆசி பெற்றார்.
குடியரசுத் தலைவரது வருகையை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.