தமிழர் நிலங்களை தமிழரே வாங்க வேண்டும்!

Published:

land srilanka Thellippazhai - 2026

யுத்தகாலத்தில் சிங்கள இராணுவத்துடன் இணைந்து முஸ்லிம் ஊர்காவல் படைகளும்,அரசியல்வாதிகளின் பின்னணியுடனான ஜிகாதிக் குழுக்களும் இனப்படுகொலைகளைக் கட்டவிழ்த்துவிட்டும் அச்சுறுத்தியும் தமிழ்க் கிராமங்களை அபகரித்தன.

யுத்தத்தால் விவசாயம்,கால் நடைவளர்ப்பு,மீன்பிடி போன்ற தமிழ்க் கிராமங்களின் தொழில்கள் வீழ்ந்ததால் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்ததைப் பயன்படுத்தி எல்லையோரத்தில் ஆரம்பித்து படிப்படியாக அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி பல ஊர்களை விழுங்கிவிட்டார்கள்.

இதன் பிறகு சில தமிழ்க் கிராமங்கள் விழித்துக்கொண்டு நிலங்களை தமிழர் அல்லாதவர்களுக்கு விற்பதில்லை என்று தீர்மானித்தன.யாராவது நிலத்தை விற்கவிரும்பி அதை விலைகொடுத்து வாங்குவதற்கு தமிழர்கள் எவரும் இல்லாத நிலையில் அந்த நிலத்தை கோயில் பொதுநிதியிலிருந்து வாங்கும் செயற்திட்டத்தைக் கொண்டுவந்தன.இவ்வாறு தமிழ் நிலங்கள் பறிபோகாதவாறு கோயில்கள் நிதிநிறுவனங்களாகமாறிக் காத்தன.

இவ்வாறாக கிழக்கின் சில தமிழ் ஊர்கள் தமிழர்களுக்கு என்றென்றைக்கும் வழிகாட்டியான செயற்திட்டத்தை உருவாக்கித் தந்துள்ளன.

இதை முழு வடக்குக் கிழக்கும் பின்பற்றவேண்டும்.வடக்குக்கிழக்கு எங்கும் தமிழர்கள் நிலங்களைத் தமிழர்களுக்கே விற்கவேண்டும்.அவ்வாறு தமிழர்கள் யாரும் வாங்க முன்வராவிட்டால் கோயில்கள் தமது நிதிவளத்தைப் பயன்படுத்தி அவற்றை வாங்கிப் பாதுகாக்கவேண்டும்.பின்னர் நிலத்தின் சந்தை மதிப்பை தமிழர்கள் எவராவது கொடுத்து வாங்க முன்வந்தால் அவர்களுக்கு விற்றுவிடலாம்.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

கருத்து: – நடேசபிள்ளை சிவேந்திரன்

Related articles

Recent articles

spot_img