December 8, 2025, 3:05 PM
28.2 C
Chennai

தினகரனை சாய்த்த எடப்பாடி? எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பிம்பம் சாய்ந்தது!

edappadi dinakaran panneerselvam - 2025

சென்னை:

அதிமுகவில் தற்போது மூன்றாவது அணியை உருவாக்கி செயல்பட்டு வரும் தினகரன் அணிக்கு வெறும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஏற்கெனவே தினகரனை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் கூறியிருந்தனர். தினகரனும் ஒதுங்கி இருப்பதாக கூறினார். ஆனால் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தினகரன் தான் மீண்டும் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளதாக அறிவித்தார். மேலும் தன்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என கூறினார்.

இதையடுத்து சசிகலாவை சிறையில் சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் 60 நாட்கள் அமைதியாக இருக்கப்போவதாகவும், அதற்குள் அதிமுக அணிகள் ஒன்றிணையவில்லை என்றால் தான் தீவிரமாக இறங்க உள்ளதாகவும் கூறினார். ஆனால் அதிமுக அமைச்சர்கள் அவரை மீண்டும் ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். அவர் ஒதுங்கி இருப்பது நல்லது என அறிவுறுத்தினர். இதனையடுத்து தினகரனை வரிசையாக எம்எல்ஏக்கள் சந்தித்தவாறு இருந்தனர். இதனால் அதிமுகவில் மூன்றாவது அணி உருவானது.

தினகரனை சந்திக்கும் எம்எல்ஏக்கள் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் எடப்பாடி அணி சற்று கலக்கமடைந்தது. இறுதியாக 33 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர் என கூறப்பட்டது. இந்தச் சூழலில் எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி அவர்களுடன் பேசினார்.

இந்தக் கூட்டத்துக்கு தினகரனை சந்திக்க சென்ற எம்எல்ஏக்களும் வந்திருந்தனர். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏ.,க்களிடம் பேசி அவர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொண்டார்.

உங்களுடைய தேவைகளை முழுமையாக நிறைவேற்றித் தருகிறேன் ஆனால் அமைச்சர் பதவி குறித்து என்னால் எந்த உறுதியும் அளிக்க முடியாது. அரசுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள் என எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏ.,க்களிடம் உருக்கமாகக் கூறினாராம். இதற்கு எம்எல்ஏ.,க்களும் செவி சாய்த்தனராம்.

இதை அடுத்து, ஆட்சிக்கு எதிராக தினகரன் செயல்பட இருந்தார். நாங்கள் அவருக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என எடப்பாடியிடம் உறுதி அளித்தனராம். இதன் மூலம் தற்போது தினகரன் அணியில் ஐந்து எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளதாக அதிமுக., வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Topics

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Entertainment News

Popular Categories