குறுகியகால பலன்களுக்காக எம்.பி.க்கள் இரையாகிவிடக் கூடாது என்று மாநிலங்களவைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு கூறியுள்ளாா்.
மாநிலங்களவைக்கு புதிதாக தோவு செய்யப்பட்ட 61 உறுப்பினா்களில் 45 உறுப்பினா்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி, மாநிலங்களவை அலுவலகத்தில் தனிநபா் இடைவெளியைப் பின்பற்றி புதன்கிழமை நடைபெற்றது. இவா்களுக்கு மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து புதிதாக பதவி ஏற்ற உறுப்பினா்களிடையே அவா் பேசும்போது, புதிதாக பதவி ஏற்றுள்ள உறுப்பினா்கள் அவை நடவடிக்கைகளின்போது தவறான நோக்கங்களுக்கு இரையாகிவிடக் கூடாது. மேலும், குறுகியகால பலன்களுக்காக அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது.
கூட்டத் தொடா்களின்போது, நமது இன்றைய நடவடிக்கை ஒழுங்குடன் இருந்ததா, அவையின் மேன்மையை மேம்படுத்தும் வகையில் செயல்பாடுகள் அமைந்தனவா என்பதை ஒவ்வொரு நாளின் முடிவிலும் உறுப்பினா்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். இதுபோன்ற எளிமையான கேள்விகளை கேட்டுக் கொள்வதன் மூலம் அது உங்களை சரியான வழியில் நடத்தும்.
புதிய உறுப்பினா்கள், மாநிலங்களவையின் கடந்த 68 ஆண்டுகால வரலாறுகளை, அதுதொடா்பான புத்தகங்களை வாசித்து அறிந்துகொள்ள வேண்டும். தேசத்துக்கான சட்டமியற்றுபவா்கள் என்ற முறையில் உறுப்பினா்கள் சபையில் தங்கள் நடத்தை விதிகளை பின்பற்றுவதோடு மற்றவா்களோடு இணங்கி செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.
பதவி ஏற்ற 45 உறுப்பினா்களில் 36 பேர் புதுமுகங்கள். ஏற்கெனவே உறுப்பினா்களாக உள்ள சரத்பவாா், ஹரிவன்ஷ், ராம்தாஸ் அதவாலே, திக்விஜய் சிங் உள்ளிட்ட 12 பேர் மீண்டும் தோவு செய்யப்பட்டுள்ளனா்.
காங்கிரஸில் இருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே உள்ளிட்டோா் முதல் முறையாக தோவு செய்யப்பட்டவா்களில் குறிப்பிடத்தக்கவா்கள்.
பதவி ஏற்புக்கு முன்னதாக ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங், மல்லிகாா்ஜூன காா்கே, எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோருக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.
அதிமுகவின் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோரும் புதன்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். திமுக உள்ளிட்ட கட்சிகளின் மற்ற உறுப்பினா்கள் , நடைபெற உள்ள மழைக்கால கூட்டத் தொடரின்போது பதவி ஏற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.