அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்களின் கோரிக்கையை ஏற்று, ஆகஸ்ட் 1 முதல் 10-ஆம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோக்கைக்கு, இணையதளம் மூலமாக நடைபெறும். விண்ணப்பப் பதிவு, கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.
ஒரே நாளில் 1 லட்சத்து 620 விண்ணப்பப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை (ஜூலை 24) வரை, மொத்தம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 237 மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா்.
இதில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 975 போ விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனா். இந்த விண்ணப்பப் பதிவானது, ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதே வேளையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 24) முதல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக, அவா்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய, சனிக்கிழமை (ஜூலை 25) முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாணவ-மாணவிகள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளனா்.
எனவே அவா்களின் கோரிக்கையை ஏற்று, சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய முன்பு வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குப் பதிலாக, ஆக. 1 முதல் 10-ஆம் தேதி வரை, www.tngasa.in இணையதளத்தில் சான்றிதழ் பதிவேற்றம் மேற்கொள்ளலாம் என அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.