வீட்டு வாசலில் மருத்துவர் செய்த செயல்: பெண்மணி புகாரில் வழக்கு பதிவு!

dr-pro

வாகன பார்க்கிங் காரணமாக எழுந்த மோதலை தொடர்ந்து, ஏ.பி.வி.பி தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது பெண்மணி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை ஆலந்தூர் காவல் நிலையத்தில் பெண்மணி அளித்திருக்கும் புகாரில் டாக்டர் சண்முகம் அவரின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தாகவும், அறுவை சிகிச்சையில் பயன்படுத்திய மாஸ்க் மற்றும் குப்பைகளை தனது வீட்டு வாசலில் விட்டு சென்றதாகவும் கூறியுள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சி படங்களையும் அவர் கொடுத்துள்ளார்.

62 வயதான அந்தப் பெண், டாக்டர் சுப்பையா சண்முகம் வசிக்கும் அதே குடியிருப்பில் வசித்து வருகிறார். வாகன பார்க்கிங் தொடர்பாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. டாக்டர் சுப்பையா, அந்தப் பெண்ணுக்குச் சொந்தமான இடத்தில் கார் பார்க் செய்ய அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அவர், ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால் இது தொடர்பில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையை வைத்து, டாக்டர் சுப்பையா, பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக, காவல் நிலையத்தில் புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி காட்சியை கொடுத்துள்ளார்! ஆலந்தூர் காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்தப் பெண்ணின் மருமகனும் ஸ்டாண்டப் காமெடியனுமான பாலாஜி விஜயராகவன் அவருக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை என்று குரல் கொடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்தார். இதை அடுத்து, இந்த விவகாரம் வைரலானது.

இந்நிலையில்,  டாக்டர் சுப்பையா சண்முகம் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை சுப்பையா உடனடியாக மறுத்திருந்தார். “என் மீது உள்நோக்கத்துடன் புகார் தரப்பட்டுள்ளது.. இதை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்… சிசிடிவி காட்சிகள் பொய்யாக சித்திரிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் புரிந்துணர்வற்ற விதத்தில் புகார் கொடுக்கப் பட்டதாகவும், இரு தரப்புக்கும் இடையே சமாதானம் செய்து பிரச்னை தீர்க்கப் பட்டு விட்டதாகவும், ஏபிவிபி தரப்பில் தகவல் வெளியானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

Topics

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories