தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதலே கனமழை பெய்யத் தொடங்கியது. விடிய, விடிய நீடித்த மழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
சென்னையில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளன. மயிலாப்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.