சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி சுட்டு கொலை ராஜஸ்தான் கொள்ளை கும்பல் வெறி செயல்
ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்னணி…
கடந்த நவ.16-ம் தேதி கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் 3.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
- நகைக்கடையின் மேல்தளத்தை வாடகைக்கு எடுத்து, துளையிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
கொள்ளை தொடர்பாக கொள்ளையர்களின் உறவினர் 4 பேர் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னையிலிருந்து, ராஜஸ்தான் விரைந்தனர்.
நேற்றிரவு கொள்ளையர்களை சுற்றி வளைத்த போது, கொள்ளையர்களால் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பெரியபாண்டி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மூவிருந்தாளி கிராமத்தைச் சேர்ந்தவர்.