கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, யாஸ் என்ற புயலாக தீவிரமடைந்துள்ளது.. மேலும் அடுத்தடுத்த 24 மணி நேரத்தில் மிகக் கடுமையான புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
யாஸ் புயல் தொடர்ந்து வட-வடமேற்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, புதன்கிழமை காலைக்குள் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரைகளுக்கு அருகிலுள்ள வடமேற்கு வங்க விரிகுடாவை அடையும்.
பரதீப் மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையிலான வடக்கு ஒடிசா-மேற்கு வங்க கடற்கரைகளை புதன்கிழமை மாலைக்குள் கரையை கடக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில், மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கன முதல் மிக அதிக கனமழை பெய்யக்கூடும்.
ஒடிசாவில், பல இடங்களில் மிதமான மழை பெய்யும். மே 25ம் தேதி, கடலோர மாவட்டங்கள், பலசோர், பத்ராக், கேந்திரபாரா, மயூர்பஞ்ச் ஆகிய இடங்களில் அதிக கனமழை (20 செ.மீ க்கும் அதிகமான) மற்றும் வடக்கு ஒடிசா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக அதிக மழை பெய்யும்.
நாளை, மேற்கு வங்கம் ஆநிலத்தின் மதினிபூர், தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானாஸ், ஹவுரா மற்றும் ஹூக்லி மாவட்டங்களில் கனமழை முதல் மிக அதிக மழை பெய்யும். ஜார்கிராம், மெடினிபூர், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாக்கள், ஹவுரா, ஹூக்லி, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் மிக அதிக கனமழை முதல் அதிக மழை பெய்யக்கூடும்.
வடக்கு வங்கக்கடலிலும், ஒடிசா – மேற்கு வங்கம் – பங்களாதேஷ் கடற்கரையிலும் மே 24 மாலை முதல் 40-50 கி.மீ வேகத்தில் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும். இது படிப்படியாக 25- மாலை முதல் 50-60 கி.மீ வேகத்தில் 70 கி.மீ வேகத்தில் அதிகரிக்கும்.
இது மே 26 அதிகாலை முதல் மேற்கு வங்காளம் மற்றும் அதனைத் தாண்டி வடக்கு ஒடிசா மற்றும் பங்களாதேஷ் கடற்கரைகளுக்கு 60-70 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 80 கி.மீ வேகத்தில் வீசும். இது படிப்படியாக 90-100 கிமீ வேகத்தில் 110 கிமீ வேகத்தில் மே 26 மதியம் முதல் மாலை வரை அதிகரிக்கும்.
மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அந்தமான் கடல் மற்றும் அதனுடன் இணைந்த கிழக்கு மத்திய வங்கக்கடலில் நிலைமை மிகவும் கடினமானதாக இருக்கும், கடலில் ராட்சத அலைகள் ஏற்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.