காஷ்மீர் போலீஸ் சிறப்பு ஐ.ஜி. விஜய் குமார் நேற்றுமுன்தினம் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த ஆண்டில் மட்டும் காஷ்மீரில் 78 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 39 பேர் லஷ்கர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். அதைத் தொடர்ந்து ஹிஸ்புல் முஜாகிதீன், அல்-பதர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் அதிகமாக கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலர் கடந்த ஓரிரண்டு ஆண்டுகளில் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
அண்மையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் நதீப் அப்ரார் பட் என்பவர் கொல்லப்பட்டார். அவர் 2018-ல் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..
இவ்வாறு அவர் கூறினார்.