இன்றைய பஞ்சாங்கம் – மே 2
தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
||श्री:||
!!ஸ்ரீ:!!
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
சித்திரை ~* *19 (2.5.2024 ) வியாழன் கிழமை.
வருடம் ~ க்ரோதி {க்ரோதி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ சித்திரை மாஸம் {மேஷ மாதம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 10.56 pm வரை நவமி பின் தசமி
நாள் ~ {குரு வாஸரம்} வியாழன் கிழமை.
நட்சத்திரம் ~ இரவு 11.01 வரை அவிட்டம் பின் சதயம்
யோகம் ~ சுப்ரம்
கரணம் ~ தைதுளை
அமிர்தாதியோகம்~ சுபயோகம்.
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00.
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30.
குளிகை ~ காலை 9.00 ~ 10.30.
சூரிய உதயம் ~ காலை 5.57
சந்திராஷ்டமம் ~ 1.43 pm வரை மிதுனம் பின் கடகம்
சூலம் ~ தெற்கு.
பரிகாரம் ~ நல்லெண்ணெய்.
ஸ்ராத்ததிதி ~ நவமி
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!
சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.
காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை
பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை
இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை
இன்றைய ராசிபலன்கள்
2.05.2024
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் ..!
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் மனம் விட்டு பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் நெருக்கம் ஏற்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்
அஸ்வினி : அனுபவ அறிவு வெளிப்படும்.
பரணி : செல்வாக்கு மேம்படும்.
கிருத்திகை : நம்பிக்கை பிறக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!
செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். புதிய வீடு வாங்குவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : துரிதம் ஏற்படும்.
ரோகிணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் ..!
எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் கடன்கள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்கள் இடத்தில் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். அலுவலகப் பணிகளில் பொறுப்பு மேம்படும். பங்குதாரர்களின் வழியில் சில விரயங்கள் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டிய நாள்.
திருவாதிரை : சிந்தித்துச் செயல்படவும்.
புனர்பூசம் : விரயங்கள் உண்டாகும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் ..!
மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். நெருக்கடியான சூழல்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் நலத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். எதிலும் முன்கோபம் இன்றி செயல்படவும். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். உத்தியோகத்தில் கேலி பேச்சுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : நெருக்கடியான நாள்.
பூசம் : கனிவு வேண்டும்.
ஆயில்யம் : விவேகத்துடன் செயல்படவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் ..!
சிக்கலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். வேலையாட்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : மாற்றங்கள் ஏற்படும்.
உத்திரம் : அனுபவமான நாள்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் ..!
சில விஷயங்களில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
உத்திரம் : பொறுமையை கடைபிடிக்கவும்.
அஸ்தம் : மாற்றங்கள் உண்டாகும்.
சித்திரை : வாய்ப்பு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் ..!
குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உடன் இருப்பவர்களின் சுயரூபங்களை அறிவீர்கள். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பழைய வேலையாட்களை மாற்றுவது குறித்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : கருத்து வேறுபாடுகள் விலகும்.
சுவாதி : ஆர்வம் ஏற்படும்.
விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!
செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். குழந்தைகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் புரிதல் உண்டாகும். வாடிக்கையாளர்களிடத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
விசாகம் : தடைகள் விலகும்.
அனுஷம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
கேட்டை : விவாதங்களை தவிர்க்கவும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் ..!
திட்டமிட்ட பணிகளில் உள்ள தடைகளை வெற்றி கொள்வீர்கள். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆசைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : வெற்றிகரமான நாள்.
பூராடம் : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
உத்திராடம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் ..!
கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களின் வழியில் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
உத்திராடம் : தெளிவு பிறக்கும்.
திருவோணம் : சங்கடங்கள் மறையும்.
அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் ..!
மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உங்களை பற்றிய விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் மறதியால் சில பிரச்சனைகள் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அவிட்டம் : செலவுகள் ஏற்படும்.
சதயம் : அனுபவம் கிடைக்கும்.
பூரட்டாதி : குழப்பம் நீங்கும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் ..!
குடும்பம் பற்றிய கவலைகள் தோன்றி மறையும். விமர்சன பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பழைய சிக்கல்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். மற்றவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். எதிலும் விவேகத்தை கடைபிடிப்பது நல்லது. வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : கவலைகள் மறையும்.
உத்திரட்டாதி : முடிவு கிடைக்கும்.
ரேவதி : விவேகம் வேண்டும்.
இன்றைய நற் சிந்தனைகள்
விடாமுயற்சி
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill
நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.
தினம் ஒரு திருக்குறள்
நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்
அதிகாரம் : படைச்செருக்கு
குறள் 775
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.
இன்றைய சிந்தனைக்கு
”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”
‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…
எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…
மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !
பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!
நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!
இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!
ஆம் நண்பர்களே…!
‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!
?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??
- தினசரி.காம்
ரிஷபம௠ராசி ரோகிணி நடà¯à®šà®¤à¯à®¤à®¿à®°à®®à¯ கடகà¯à®• லகà¯à®•à®©à®®à¯ பிறநà¯à®¤ தேதி
௨௦.௦௮.௧௯௮௫ நேரம௠காலை ௪.௩௦மà¯