சென்னை: ஹெச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி மாநாட்டு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றுப் பேசினார்.
நீதிமன்றத்தையும் போலீசாரையும் அவதூறாகப் பேசிவிட்டார் ஹெச்.ராஜா என்று ஒரு புகார் மனு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்தில் கொடுக்கப் பட்டு, அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதை அடுத்து, ஹெச்.ராஜாவை கைது செய்வதற்காக, திருமயம், பொன்னமராவதி காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படைகள் ஞாயிறன்று அமைக்கப்பட்டன. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், இந்து முன்னணி சார்பில் நபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பங்கேற்றுப் பேசினார்.
இதற்கிடையே இன்று மாலை செய்தித் தாள்களிலும் ஊடகங்களின் பிளாஷ் செய்திகளிலும், ஹெச்.ராஜா தலைமறைவு என்றே செய்திகள் போடப் பட்டுக் கொண்டிருக்க, இன்று மாலை நடைபெற்ற ஹிந்து முன்னணி விநாயகர் விழாவில் கலந்து கொண்டு பேசினார் ஹெச்.ராஜா.