ஹெச்.ராஜா தலைமறைவு என்று தலைப்புச் செய்தி போட… அவரோ பொதுக்கூட்டத்தில் பங்கேற்க…

Published:

h raja1 - 2026

சென்னை: ஹெச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி மாநாட்டு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றுப் பேசினார்.hrajanewsss 1 - 2026

நீதிமன்றத்தையும் போலீசாரையும் அவதூறாகப் பேசிவிட்டார் ஹெச்.ராஜா என்று ஒரு புகார் மனு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்தில் கொடுக்கப் பட்டு, அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

hrajanewsss - 2026இதை அடுத்து, ஹெச்.ராஜாவை கைது செய்வதற்காக, திருமயம், பொன்னமராவதி காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படைகள் ஞாயிறன்று அமைக்கப்பட்டன. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், இந்து முன்னணி சார்பில் நபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பங்கேற்றுப் பேசினார்.

h rajanewss - 2026இதற்கிடையே இன்று மாலை செய்தித் தாள்களிலும் ஊடகங்களின் பிளாஷ் செய்திகளிலும், ஹெச்.ராஜா தலைமறைவு என்றே செய்திகள் போடப் பட்டுக் கொண்டிருக்க, இன்று மாலை நடைபெற்ற ஹிந்து முன்னணி விநாயகர் விழாவில் கலந்து கொண்டு பேசினார் ஹெச்.ராஜா.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img