எதைக் கேட்டாலும் அனிதான்னு வந்துடறானுங்க.. கேட்டால் இவங்க ஊடகவியலாளர்கள்… என்று குறிப்பிட்டு, தலையில் அடித்துக் கொள்ளும் பொம்மையைப் போட்டு டிவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம்.
நீட் தேர்வு குறித்து நடந்து வரும் விவாதங்களில், அடிப்படை புரிதல் அற்ற வழக்கம் போலான கிறிஸ்துவ ஊடகவியலும் திமுக., புகட்டிய அறிவும் மூளையில் தங்கிவிட்ட சிலர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலாக ஷ்யாம் குறிப்பிட்டுள்ள டிவிட்டர் பதிவில்…
NEET MBBS பொருத்த வரை ஒரு மாநிலத்தில் உள்ள 85% இடங்களுக்கு வேற மாநிலத்தை சார்ந்தவர்கள் போட்டி போட முடியாது. போட்டி தமிழக மாணவர்களுக்குள் மட்டுமே என்ற அடிப்படை விசயம் கூட ஊடகவியலாளர்கள் உட்பட பலருக்கு தெரிவதில்லை. எத கேட்டாலும் அனிதானு வந்தராங்க
NEET MBBS பொருத்த வரை ஒரு மாநிலத்தில் உள்ள 85% இடங்களுக்கு வேற மாநிலத்தை சார்ந்தவர்கள் போட்டி போட முடியாது.
போட்டி தமிழக மாணவர்களுக்குள் மட்டுமே என்ற அடிப்படை விசயம் கூட ஊடகவியலாளர்கள் உட்பட பலருக்கு தெரிவதில்லை.
எத கேட்டாலும் அனிதானு வந்தராங்க ????????♂️— Shyam Krishnasamy (@DrShyamKK) June 5, 2019