திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் பயணச்சீட்டு சேகரிப்பு கலை நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.
பணத்தாள்கள் சேகரிப்பாளர் சங்கத்தின் நாணயவியல் சேகரிப்பாளர் லக்ஷ்மிநாராயணன் நூலினை வெளியிட ரமேஷ் பெற்றுக்கொண்டார்.
திருச்சிராப்பள்ளி பணத் தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், பொருளாளர் அப்துல் அஜீஸ், கமலக்கண்ணன், முகமது சுபேர், சந்திரசேகரன், மன்சூர், இளங்கோவன் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.