spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்விருதுநகரில் ராதிகாவுக்கு ஆதரவு கோரி ஜே.பி. நட்டா பிரசாரம்!

விருதுநகரில் ராதிகாவுக்கு ஆதரவு கோரி ஜே.பி. நட்டா பிரசாரம்!

- Advertisement -
jb nadda in virudhunagar meeting

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக., மூத்த தலைவர்கள் பாஜக., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனர்.

விருதுநகரில் ராதிகா சரத்குமாரை ஆதரித்து ஜே.பி. நட்டா தேர்தல் பிரசாரம் செய்தார்.

விருதுநகர் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்த பாஜக., தேசியத் தலைவர் ஜே பி நட்டா மற்றும் தேசிய செயலாளர் எச் ராஜா ஆகியோர் திருமங்கலத்தில் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகாவை ஆதரித்து பிரசாரத்தை, முடித்து திருச்சி புறப்பட்டார்.

பாஜக தேசிய தலைவர் ஜே பி நாட்டார் ஹெலிகாப்டர் மூலம் மதுரை எலியார் பத்தியில் உள்ள தனியார் கல்லூரிக்கு வந்தடைந்தார். பின்னர் பாஜக நிர்வாகிகள் வரவேற்கு பின் காரில் திருமங்கலம் நோக்கி புறப்பட்டு சென்றார்.

திருமங்கலத்தில் நடைபெற்ற விருதுநகர் நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆதரித்து, பிரச்சாரம் மேற்கொண்டு மீண்டும் எலியார் பத்தி தனியார் கல்லூரி வந்தடைந்து நிர்வாகிகளுடன் வரவேற்புக்கு பின் , பேசி விடை பெற்றார்.

பாஜக சார்பில், திருமங்கலம் சட்டமன்ற பொறுப்பாளர் சத்திவேல், மாவட்ட மாவட்ட செயலாளர் இளையராஜா எலியார் பத்தி ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் காளிதாஸ் உள்ளிட்ட 20 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மதுரை எலியார் பத்தி தனியார் கல்லூரியிலிருந்து திருச்சி புறப்பட்டு சென்றார்.

திருச்சியில் சாலை ஊர்வலம்

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை தேனியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் அவர் திருச்சிக்கு வந்தார்.

முன்னதாக, திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை சாலை ஊர்வலம் (ரோடு ஷோ) நடத்தி வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பாஜக., மற்றும் கூட்டணிக் கட்சியினர் இதற்காக திருச்சி மாநகர காவல் துறையிடம் அனுமதி கேட்டனர். அதற்கு காவல் ஆணையர் காமினி அனுமதி மறுத்துள்ளார்.

சாலை ஊர்வலத்துக்கான அனுமதி கேட்கப்பட்ட பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பகுதி என்பதால் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. எனினும் திட்டமிட்டபடி ரோடு ஷோ நடத்த பாஜக.,வினர் முடிவு செய்தனர்.

இதற்கான மாற்று இடம் குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அதன்பேரில் அனுமதி பெற்று ரோடு ஷோ நடத்தப்படும் என்று பா.ஜ.க.வினர் தெரிவித்தனர். அதன்படி, அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோட் ஷோ பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. “கண்ணப்பா ஹோட்டல் முதல் விஎஸ்ஐ மருத்துவமனை வரை மாற்றுப்பாதையில் ரோட் ஷோ நடத்திக் கொள்ளலாம். மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே ரோட் ஷோவிற்கு அனுமதி” வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

அதன்படி ஜே.பி. நட்டாவின் சாலை ஊர்வலம் திருச்சியில் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe