கூடுதல் பெட்டிகளுடன் ஓடுது கொல்லம்- சென்னை விரைவு ரயில்!

railway news - 2026
#image_title

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் ரயிலைத் தொடர்ந்து கொல்லம் – சென்னை ரயிலிலும் பெட்டிகள் அதிகரிக்கப் படுகின்றன. கொல்லம் – செங்கோட்டை – சங்கரன்கோவில் – ராஜபாளையம் – மதுரை வழியாக தினசரி இயக்கப்படுகின்ற வண்டி எண் 16101/16102 சென்னை – கொல்லம் – சென்னை விரைவு ரயிலின் பெட்டிகள் எண்ணிக்கை 14 இருந்து 17 பெட்டிகளாக அதிகரிக்கப்பட உள்ளன!

பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ரயிலான, எர்ணாகுளம் – கோட்டயம் – கொல்லம் – செங்கோட்டை – ராஜபாளையம் வழியாக வாரம் இருமுறை இயக்கப்படுகின்ற வண்டி எண் 16361/16362 எர்ணாகுளம் – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் விரைவு ரயிலின் பெட்டிகள் எண்ணிக்கை 14 இருந்து 18 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை முதல் இயங்கி வருகிறது.

இரண்டாம் வகுப்பு Sleeper படுக்கை வசதி பெட்டிகள் (2) மற்றும் மூன்றாம் வகுப்பு 3rd ஏசி பெட்டிகள் (2) இணைக்கப்பட்டு மொத்தம் 18 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்படுகின்றன .

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

இந்த வழித்தடத்தில் செங்கோட்டை முதல் கொல்லம் வரை உள்ள மலை வழி ரயில் பாதையில் 14 பெட்டிகள் மட்டுமே இயங்கும் ரயில்களை கூடுதல் பெட்டிகள் இணைக்க வசதியாக கடந்த ஆண்டு சோதனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் முடிவில் 22 பெட்டிகள் வரை இந்த மலைவழிப் பாதையில் இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து தற்போது எர்ணாகுளம் வேளாங்கண்ணி ரயில் கூடுதலாக நான்கு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழியில் இயங்கும் கொல்லம் – செங்கோட்டை – ராஜபாளையம் – சென்னை விரைவு ரயில் மற்றும் திருநெல்வேலி – செங்கோட்டை – கொல்லம் – பாலக்காடு இடையே இயங்கும் விரைவு ரயில் பெட்டிகளும் 18 பெட்டிகளாக நீட்டித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் வண்டி எண் 16101/16102 சென்னை – கொல்லம் – சென்னை விரைவு ரயிலின் பெட்டிகள் எண்ணிக்கை 14 இருந்து 17 பெட்டிகளாக அதிகரிக்கப்பட உள்ளன. இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு Sleeper படுக்கை வசதி பெட்டிகள் (2) மற்றும் மூன்றாம் வகுப்பு 3rd ஏசி பெட்டிகள் (1) இணைக்கப்பட்டு மொத்தம் 17 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்பட உள்ளன. வரும் செவ்வாய்க் கிழமை ஏப்.9 மற்றும் 10 முதல் இரு மார்க்கத்திலும் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

இதன் மூலம் இந்த ரயிலில் கூடுதல் பயணிகள் சென்னை சென்று வர வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாலக்காடு செங்கோட்டை திருநெல்வேலி விரைவு ரயில் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories