சாய் பிரியங்கா ருத் தற்போது விதவிதமான போஸ்களில் போட்டோ சூட் எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதில் அவர் நேற்று பதிவிட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.
பிரபலமான நடிகைகள், சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சியிலோ வாய்ப்பு இல்லை என்றால், உடனடியாக தங்களை கிளுகிளுப்பாக போட்டோ சூட் தயார் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர். நடிகை சாய் பிரியங்கா ருத் அது போல் பதிவிட்டுள்ளார்.
சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்த நடிகை சாய் பிரியங்கா ருத், பிறந்து வளர்ந்தது கோயம்புத்தூரில் தான். தொலைக்காட்சி சீரியல்களில் வாய்ப்பு கிடைத்ததும் சென்னையிலேயே தங்கிவிட்டார்.
இவர், முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியலில் அறிமுகமானர். தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா மற்றும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணமாம் கல்யாணம் சீரியலிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
இவர் சன் தொலைக்காட்சியில் கிராமத்தில் ஓரு நாள் நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர். டான்ஸ் ரியாலிட்டி ஷோவானா டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டுள்ளார். இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே சினிமா வாய்ப்பு தேடிவந்தது.
அதைப் பயன்படுத்தி அவர் சூது கவ்வும், மெட்ரோ, எனக்கு வாய்த்த அடிமைகள் போன்ற திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறார். 2018ஆம் ஆண்டு இயக்குனர் சி.வி.குமார் இயக்கிய கேங்ஸ் ஆப் மெட்ராஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.
இந்த திரைப்படத்தில் அவரது நடிப்புத் திறமையை பலரும் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது. ஆனால் இந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. பிரியங்கா வெவ்வேறு வகை திரைப்படங்களில் பணியாற்றி, தன்னைத்தானே பரிசோதனை செய்துக்கொள்கிறார்.
சமீப காலமாக சாய் பிரியங்கா ருத் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.