வித்யா பாரதி, கல்வியாளர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த புதிய கல்விக் கொள்கை ஆதரவு கருத்தரங்கம் நான்கு தினங்கள் நடைபெற்றது.
செப்டம்பர் 8 முதல் 11ஆம் தேதி வரை நான்கு நாட்கள், செங்கல்பட்டில் தேசிய கல்விக் கொள்கை ஆதரவுக் கூட்டம் காணாளி வாயிலாக நடைபெற்றது. இதில் பல கல்வியாளர்களும், ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர் பெருமக்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று ஆர். ரவீந்திரன் (வித்யாபாரதி தமிழ்நாடு) நடத்தினார். செங்கல்பட்டு கேசிஜெ விவேகானந்த வித்யாலயா கௌரவ தாளாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.
ஆர்.எம். சம்பந்தன் (டி.ஏ.வி. பள்ளி), சங்கர நாராயணன் (கோகுலம் பொதுப் பள்ளி முதல்வர், செங்கல்பட்டு). ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்
பல்வேறு பள்ளிகளின் 18 ஆசிரியர்கள் பல்வேறு தலைப்புகளில் புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.
இந்தக் கருத்தரங்குகளில் வழங்கப்பட்ட சில முக்கிய அம்சங்களாக, மும்மொழி கல்விக் கொள்கை அைனவருக்கும் ஏற்றது. சுமையல்ல சுகமான கல்வியின் தொடக்கமே… தேசியக் கல்விக் கொள்கையின் சிறப்பு…
தாய்மொழிக் கல்வி, இலவச கல்வி முறையே சமூகநீதியின் தொடக்கம்..
தொழிற்கல்வியினால் வருங்கால சமுதாயத்தின் வாழ்க்கை நிலை மேம்படும்.. … போன்றவை இடம்பெற்றன.
கருத்தரங்கின் இறுதி நாளான செப்.11 அன்று தேசியக் கல்விக்கொள்கை திறனாய்வுப் போட்டிகள், ராமகிருஷ்ண விஜயம் இதழின் ஆசிரியர் சுவாமி அபவர்கானந்தாஜி, சென்னை சின்மயா மிஷன் சுவாமி மித்திரானந்தாஜி ஆகியோர் ஆசிகளுடன் தொடங்கி வைக்கப் பட்டன.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென்பாரத தலைவர் டாக்டர் ஆர்.வன்னியராஜன், தேசிய கல்விக் கொள்கை குறித்த நூலை வெளியிட்டு, நிறைவுைர நிகழ்த்தினார்.