தலைவர்கள் தொல்லை.. கடிதம் எழுதி கட்சி ஆபிஸில் தூக்கில் தொங்கிய பெண்!

asha

எனக்கு தலைவர்கள் எல்லாரும் டார்ச்சர் தந்தார்கள்” என்று லெட்டர் எழுதிவைத்துவிட்டு, மார்க்சிஸ்ட் கட்சி ஆபீசிலேயே பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை தந்துள்ளது.

திருவனந்தபுரம், பாரசாலா அருகே உள்ளது உதயங்குளக்காரா என்ற பகுதி.. இங்கு வசித்து வந்த தம்பதி ஸ்ரீகுமார் – ஆஷா. இதில் ஆஷா கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். 41 வயசாகிறது.

கடந்த வியாழக்கிழமை கட்சி ஆபீசுக்கு செல்வதாக சொல்லி, வீட்டிலிருந்து கிளம்பி சென்றுள்ளார். ஆனால் அதற்கு பிறகு வீட்டுக்கு வரவே இல்லை.. இதனால் பதறி போன குடும்பத்தினர், அந்த ஆபீசுக்கு சென்று பார்த்தனர். அப்போது, கட்சி ஆபீசுக்குள்ளேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அலறினர்

இதையடுத்து தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர். அப்போது ஆஷா தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில், “உள்ளுர் தலைவர்கள் ராஜன், ஜாய் இவங்க 2 பேரும் என்னை தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தனர். இவர்களிடம் இருந்து என்னால் தப்பிக்கவே முடியவில்லை. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். வாழவும் விருப்பமில்லை.

தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துவிட்டேன். இவர்கள் என்னை டார்ச்சர் செய்வது குறித்து கட்சியின் மேல்மட்ட தலைவர்களுக்கு புகார் சொன்னேன். ஆனால் அவர்களும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று எழுதி வைத்திருந்தார். ஆஷாவின் கடிதத்தை பார்த்ததுமே உறவினர்கள் கொந்தளித்துவிட்டனர்.

சடலத்தை வாங்க மாட்டோம் என மறுத்து போராட்டமும் செய்தனர். இறுதியில் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி சடலத்தை ஒப்படைத்தனர்.

இந்த விவகாரத்தை கேரள எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இது சம்பந்தமாக அவர்கள் சொல்லும்போது,” இந்த மரணத்தில் உரிய நியாயம் வேண்டும். நேர்மையான டிஜிபி ஒருவரை வைத்துதான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சிக்குள் பெண்களுக்கு சுத்தமா பாதுகாப்பு என்பதே கிடையாது. மார்க்சிஸ்ட் கட்சி பெண் தொண்டர்கள் குறி வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது.

அந்த பெண்தான் தன்னுடைய பிரச்சனை பற்றி விளக்கமாக சொல்லி புகார் தந்திருக்கிறாரே? ஏன் மேல் மட்ட தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர். ஏற்கனவே கடத்தல் தங்க மங்கை ஸ்வப்னா விவகாரத்தில், ஆளும் கட்சி தலையில் கத்தி தொங்கி வரும் நிலையில், இந்த விவகாரம் கேரளப் பகுதி முழுவதையும் பரபரப்பாக்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories