தமிழகத்தில் 1 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31 வரை பள்ளிகள் விடுமுறை அளிக்கப் படுவதாக தகவல் வெளியானது.
ஆன்லைன், கல்வித் தொலைக்காட்சி மூலம் 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும்! என்றும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் கல்லூரிகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. அனைத்து பிஇ, கலை – அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
10,11,12 ஆகிய வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் வழக்கம் போல பள்ளிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.