.ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதையடுத்து காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.அங்கு ஒரு பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் காஷ்மீரின் ரஜோரி மாவட்டம், நௌசெரா எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை மீணடும் தாக்குதலை நடத்தியது. இதில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். உயிரிழந்த வீரரின் பெயர் சந்தீப் தபா என தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்தப் பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.