சாப்பாட்டில் சயனைடு கலந்து கணவனை காலி செய்த மனைவி ! கள்ளக்காதலனுடன் கைது !

sobhi - 2026கேரள மாநிலம் புனலூரை சேர்ந்தவர் சேம் ஆபிரகாம். இவரது மனைவி சோபி. சேம் ஆபிரஹாம் ஆஸ்திரேலியாவில் உள்ள கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். மேலும் சோபி மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக பணியாற்றினார். இவர்களுக்கு 4 வயது மகன் உள்ளார்.

தங்கள் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வந்த சேம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து தனது கணவர் மாரடைப்பில் உயிரிழந்துவிட்டதாக சோபி தெரிவித்ததை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய கடுமையான விசாரணையில், சோபி தனது கள்ளக்காதலன் அருண் என்பவருடன் சேர்ந்து சயனைடு விஷம் கொடுத்து ஆபிரகாமை கொன்றது தெரியவந்துள்ளது. அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, கேரளாவில் நர்சிங் படித்த போது அருண் என்ற என்ஜினீயருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அருணும் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் பணியாற்றி வந்ததால் இருவருக்கும் இடையே உள்ள பழக்கம் தொடர்ந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த சேம் ஆபிரகாம் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் சோபி தனது கள்ளக்காதலன் அருணுடன் சேர்ந்து சாப்பாட்டில் சயனைடு கலந்து கொடுத்து கொன்றுவிட்டு நாடகமாடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சோபி மற்றும் அருணை கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்தகைய வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் சோபிக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அருணுக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories