இன்று நாடு முழுதும் விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப் படுகிறது. மூல முதல்வன் என்று ஹிந்து தத்துவ மரபுகளிலும் புராணங்களிலும் புகழப் படும் விநாயகரின் மகா சதுர்த்தி தினமான இன்று நாடு முழுதும் விழாவாகக் கொண்டாடுகின்றனர் ஹிந்துக்கள்.
பண்டிகை வருடத் தொடக்கத்தின் முதல் விழா போல், விநாயக சதுர்த்தி அமைகிறது. இதை அடுத்து வரிசையாக ஹிந்துப் பண்டிகைகள் களை கட்டும் என்பதால், விநாயக சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப் படுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு, பாரதப் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். அவர் தமது டிவிட்டர் பதிவில்…