மலேரியா ஜூரத்திற்கு…
தேன், இஞ்சிசாறு, துளசி சாறு மூன்றையும் சம அளவு எடுத்து கலந்து
ஒரு நாளைக்கு மூன்று வேளை மூன்று நாள்கள் கொடுத்து வர
மலேரியா காய்ச்சல் ஓடி விடும்.
சிவந்த உதடுகளுக்கு…
வாடாத கொத்துமல்லி தழைச் சாற்றை இரவு படுக்கப் போகுமுன்
உதட்டில் தடவி வர ஏழெட்டு நாள்களில் உதடுகள் சிவக்கத் தொடங்கும்.
வியர்வை அதிகமாக இருந்தால்…
இஞ்சி சாறு.காக்கணஞ் செடியின் இலைச்சாறு தேன் இம்மூன்றையும்
சம அளவு கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன்
அளவு சாப்பிட்டு வர அதிக வியர்வை தணிந்து விடும்.
தோலில் சுருக்கம் ஏற்படாமல் இருக்க…
காலையில் குளிப்பதற்கு முன் கடலை மாவு, ஆவாரம்பூ தூள், இவை
இரண்டையும் குழைத்து உடலில் பூசி அரைமணி நேரம் ஊறிக்
குளிக்க சருமம் மென்மை அடையும் சுருக்கமும் மறையும்.
சருமம் வெளுக்க…
உணவில் உப்பு, காரம் குறைக்க வேண்டும். எண்ணெய்ப் பொருளை
விலக்கவும். மஞ்சள்பொடி கலந்த நீரை தினமும் எட்டு தம்ளர்
குடிக்கவும். வேப்பிலை போட்டுக் காய்ச்சிய நீரில் குளிக்கவும்.
காலையில் எலுமிச்சம் பழச் சாற்றை நீரில் கலந்து உப்பு. சர்க்கரை
எதுவும் போடாமல் குடிக்கவும். தினமும் ஒரு வெங்காயத்தை தயிரில்
நறுக்கிப் போட்டு சாப்பாட்டிற்கு முன் சாப்பிடவும்.