வாருங்கள்! நாம் இப்போது உத்திர பிரதேசம் பயணிப்போம். உத்திர பிரதேசத்தின் அம்ரோஹாவைச் சேர்ந்த உஸ்மான் சைஃபீயோடு உரையாடுவோம்.
உஸ்மான் – ரொம்ப நன்றி சார்.
மோதி ஜி – சரி உஸ்மான் சொல்லுங்கள், நீங்கள் எதிர்பார்த்தது போலவே தேர்வு முடிவுகள் இருந்ததா, இல்லை உங்கள் மதிப்பெண்கள் குறைந்ததா?
உஸ்மான் – இல்லை சார், நான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் தாம் கிடைத்திருக்கின்றன. என் பெற்றோரும் மிக்க மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
மோதி ஜி – பலே, சரி உங்கள் குடும்பத்தில் சகோதரர்களும் இருக்கிறார்களா, அவர்களும் உங்களைப் போலவே புத்திக்கூர்மை உடையவர்களா?
உஸ்மான் – எனக்கு ஒரு சகோதரன் உண்டு, சேட்டைக்காரன் அவன்.
மோதி ஜி – சரி.
உஸ்மான் – அவனுக்கு என்னைப் பற்றி மிகவும் பெருமையாக இருக்கிறது.
மோதி ஜி – நல்லது. உங்கள் பாடங்களில் உங்களுக்கு அதிகம் பிடித்தமான பாடம் எது?
உஸ்மான் – கணிதம் சார்.
மோதி ஜி – அட, கணிதம் உங்களுக்கு அதிகம் பிடிக்குமா? எப்படி இது? இதில் உங்களுக்கு அதிகம் உத்வேகம் அளித்த ஆசிரியர் யார்?
உஸ்மான் – சார், எங்களுடைய கணித ஆசிரியர் ரஜத் சார் தான். அவர் தான் எனக்கு உத்வேகம் அளித்தவர், மிக அருமையாக பாடம் எடுப்பார். கணிதப் பாடம் எனக்கு தொடக்கத்திலிருந்தே விருப்பமான பாடம், மிகவும் சுவாரசியமானதும் கூட சார்.
மோதி ஜி – ஓ.
உஸ்மான் – எந்த அளவுக்கு பழகுகிறோமோ, அந்த அளவுக்கு அதிக ஆர்வம் ஏற்படும் ஆகையால் இது எனக்கு விருப்பமான பாடம்.
மோதி ஜி – அப்படியா? சரி, online vedic mathematics வகுப்புகள் நடத்தப்படுகிறதே, உங்களுக்குத் தெரியுமா?
உஸ்மான் – ஆமாம் சார்.
மோதி ஜி – இதை எப்போதாவது முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா?
உஸ்மான் – இல்லை சார்.
மோதி ஜி – கணிப்பொறியைக் கொண்டு எத்தனை வேகமாக நீங்கள் கணக்கிட முடியுமோ அதை விட அதிக வேகமாக vedic mathematics வாயிலாக செய்ய முடியும், நீங்கள் இதைப் பழகும் போது, நீங்கள் ஏதோ மாயாஜாலம் செய்கிறீர்கள் என்பதாக உங்கள் நண்பர்களுக்கு படும். மிக எளிய உத்திகள் பயன்படுத்தப் படுகின்றன, இவையெல்லாம் இப்போது ஆன்லைனிலேயே கிடைக்கின்றன.
உஸ்மான் – சரி சார்.
மோதி ஜி – உங்களுக்குக் கணிதப்பாடத்தில் விருப்பம் இருப்பதால், புதிய புதிய விஷயங்களை நீங்கள் கற்க முடியும்.
உஸ்மான் – சரி சார்.
மோதி ஜி – சரி உஸ்மான், உங்கள் ஓய்வு நேரத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
உஸ்மான் – என் ஓய்வு நேரத்தில் நான் ஏதாவது ஒன்றை எழுதுவேன். எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும் சார்.
மோதி ஜி – பலே, அப்படியென்றால் கணிதத்திலும் ஆர்வம், இலக்கியத்திலும் ஆர்வம் என்று சொல்லுங்கள்.
உஸ்மான் – ஆமாம் சார்.
மோதி ஜி – என்ன எழுதுகிறீர்கள்? கவிதைகள்?, பாடல்கள்?
உஸ்மான் – நாட்டுநடப்பு பற்றித் தொடர்புடைய ஏதேனும் ஒன்றைப் பற்றி எழுதுவேன் சார்.
மோதி ஜி – சரி.
உஸ்மான் – புதியபுதிய தகவல்கள் கிடைத்து வருகின்றன, ஜிஎஸ்டி, பிறகு நாணயவிலக்கல், இப்படிப்பட்ட விஷயங்கள்.
மோதி ஜி – அட பரவாயில்லையே!! கல்லூரிப் படிப்பு தொடர்பாக உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?
உஸ்மான் – கல்லூரிப் படிப்பைப் பொறுத்த மட்டில் jee mainsஇல் எனது முதல் கட்டத் தேர்ச்சி ஆகி விட்டது. வரும் செப்டெம்பர் மாதம் நான் இரண்டாவது முறை முயல இருக்கிறேன். என்னுடைய பிரதான இலக்கு, முதலில் ஐஐடியில் இளங்கலைப் பட்டம் பெற வேண்டும், பிறகு, ஆட்சிப்பணிக்கான தேர்வுகளை எழுதி, அதில் வெற்றி பெற வேண்டும்.
மோதி ஜி – சபாஷ்! அப்படியென்றால் உங்களுக்குத் தொழில்நுட்பத்திலும் ஆர்வம் இருக்கிறதா?
உஸ்மான் – ஆமாம் சார். ஆகையினால் தான் நான் தகவல் தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன், அதுவும் சிறந்த ஐஐடியில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
மோதி ஜி – நல்லது உஸ்மான். என் தரப்பிலிருந்து உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள். உங்கள் சகோதரன் மிகவும் சேட்டை செய்வான் என்பதால் உங்கள் பொழுது நல்லவிதமாகக் கழியும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் பெற்றோருக்கும் என் தரப்பில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்ளுங்கள். அவர்கள் தாம் உங்களுக்கு இப்படிப்பட்டதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள், உங்கள் மனோபலத்தைப் பெருக்கியிருக்கிறார்கள், படிப்புடன்கூட நீங்கள் நாட்டு நடப்புகள் மீதும் கவனம் செலுத்துகிறீர்கள், எழுதுகிறீர்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எழுதுவதால் என்ன ஆதாயம் என்றால், உங்கள் எண்ணங்களில் கூர்மை உண்டாகிறது, பல நன்மைகள் விளைகின்றன. சரி, பலப்பல பாராட்டுக்கள்.
உஸ்மான் – நன்றி சார்.
வாருங்கள்! தென்னாடு செல்வோம். தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கன்னிகாவோடு உரையாடுவோம், கன்னிகா கூறுவது உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது.
மோதி ஜி – கன்னிகா அவர்களே, வணக்கம்.
கன்னிகா – வணக்கம் சார்.
மோதி ஜி – எப்படி இருக்கிறீர்கள்?
கன்னிகா – நன்றாக இருக்கிறேன் சார்.
மோதி ஜி – முதன்மையாக நீங்கள் பெற்றிருக்கும் பெரும் வெற்றிக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
கன்னிகா – ரொம்ப நன்றி சார்.
மோதி ஜி – நாமக்கல் என்ற பெயரைக் கேட்டாலே எனக்கு ஆஞ்ஜநேயர் கோயில் தான் நினைவுக்கு வருகிறது.
கன்னிகா – ஆமாம் சார்.
மோதி ஜி – இனிமேல் எனக்கு உங்களோடு உரையாடியதும் நினைவுக்கு வரும்.
கன்னிகா – நன்றி சார்.
மோதி ஜி – மீண்டும் வாழ்த்துக்கள்.
கன்னிகா – மிக்க நன்றி சார்.
மோதி ஜி – நீங்கள் தேர்வுகளுக்காக கடுமையாக உழைத்திருப்பீர்கள் இல்லையா? தேர்வுகளுக்கு உங்களைத் தயார் செய்து கொள்ளும் அனுபவம் எப்படி இருந்தது?
கன்னிகா – நாங்கள் தொடக்கத்திலிருந்தே கடினமாக உழைத்து வருகிறோம் சார். நான் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை என்றாலும், முடிவு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது.
மோதி ஜி – உங்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது?
கன்னிகா – 485 அல்லது 486 கிடைக்கலாம் என்று நினைத்திருந்தேன்.
மோதி ஜி – ஆனால் இப்போது?
கன்னிகா – 490.
மோதி ஜி – சரி, உங்கள் குடும்பத்தார் ஆசிரியர்களுடைய எதிர்வினை எப்படி இருக்கிறது?
கன்னிகா – அவர்கள் அனைவருக்கும் மிகவும் சந்தோஷம், பெருமிதம் சார்.
மோதி ஜி – உங்களுக்கு மிகவும் பிடித்தமான பாடம் எது?
கன்னிகா – கணிதப்பாடம் சார்.
மோதி ஜி – ஓ, உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?
கன்னிகா – நான் முடிந்தால் AFMCயில் ஒரு மருத்துவராக விரும்புகிறேன் சார்.
மோதி ஜி – உங்கள் குடும்பத்தாரும் மருத்துவத் துறையில் இருக்கிறார்களா?
கன்னிகா – இல்லை சார், என் தகப்பனார் ஒரு ஓட்டுநர், என் சகோதரி மருத்துவப் படிப்பு படித்து வருகிறாள்.
மோதி ஜி – அட பரவாயில்லையே! நான் முதற்கண் உங்கள் தகப்பனாருக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் உங்களையும் உங்கள் சகோதரியையும் நன்கு கவனித்துக் கொண்டு வருகிறார். அவர் செய்து வருவது பெரும் சேவை.
கன்னிகா – ஆமாம் சார்.
மோதி ஜி – அவர் அனைவருக்கும் கருத்தூக்கம் அளித்து வருகிறார்.
கன்னிகா – ஆமாம் சார்.
மோதி ஜி – உங்களுக்கும், உங்கள் சகோதரிக்கும், உங்கள் தந்தையாருக்கும், உங்கள் குடும்பத்தவர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
கன்னிகா – மிக்க நன்றி சார்.
தொடர்ந்து அடுத்த அடுத்த பக்கங்களில் படியுங்கள்….