இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டார் பிரதமர் மோடி.
உலகெங்கும் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ். இதற்கு இந்தியா இரண்டு தடுப்பூசிகளை தயாரித்து வெளியிட்டது. கோவாக்சின் மற்றும் கோவிஷில்ட்.
பல நாடுகளுக்கும் இதனை இலவசமாக அனுப்பி வைத்தது. மேலும் இதனால் இன்று இந்தியாவை உலகநாடுகளின் நன்றி, மரியாதை ஆகியவற்றை பெற்றுள்ளது.
இந்தியாவில் முதலில் முன்களப் பணியாளர்களுக்கும் பின்னர் வயது முதிர்ந்தோர், சர்க்கரை நோய் போன்ற நோய் உடையவர்களுக்கும், ஆப்ரேஷன் செய்தவர்களுக்கும் அளிக்கப்பட்டது. ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், போடும் பணி நடைப்பெற்று வருகிறது.
இரண்டாவது களமாக தொடங்கிய தடுப்பூசி போடும் பணியில் மார்ச் மாதம் எடுத்துக் கொண்டவர்கள் இரண்டாம் டோஸ் போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி மார்ச் 1 ஆம் தேதி பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொணடார்.
தற்பொழுது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டார்.