இந்தியா இலங்கை முதல் டெஸ்ட் போட்டி, மூன்றாம் நாள்
இந்தியா இன்னிங்க்ஸ் வெற்றி
– K.V. பாலசுப்பிரமணியன் –
இந்தியா இலங்கை முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று நான்கு விக்கட் இழப்பிற்கு 108 ரன் என்ற கணக்கில் தனது முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தைத் தொடர்ந்த இலங்கை அணி முதல் இன்னிங்க்ஸில் 174 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸைத் தொடர்ந்து ஆடி 178 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதனால் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 வித்தியாசத்தில் இலங்கையை வெற்றி கொண்டது.
இது இந்தியாவிற்கு இரு சிறப்பான சாதனை நாள். ரவீந்திர ஜடேஜா ஒரே டெஸ்டில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த ஆறாவது வீரர் ஆனார். இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்று அஸ்வின் கபில்தேவை பின்னுக்குத் தள்ளினார்.
இந்த செயல்பாட்டில், இடைவிடாத இந்தியாவின் தாக்குதலில் இலங்கை சரிந்து 67 ஓவர்களில் 16 விக்கெட்டுகளை இழந்து மூன்று நாட்களில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த முதல் வீரர் மற்றும் அதே போட்டியில் 9 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை செய்த ஜடேஜா, மொஹாலி டெஸ்டில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸில் வழங்கிய 17 ஓவர்கள் பார்ட்னர்ஷிப் இலங்கை வழங்கிய நீண்ட எதிர்ப்பாகும். இலங்கையின் முதல் இன்னிங்க்ஸில் கடைசி 43 பந்துகளில் 13 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இந்திய அணி வீழ்த்தியது. எனவே ரோஹித் ஷர்மா இலங்கை அணிக்கு ஃபாலோ-ஆன் கொடுத்தார்.
இன்று சுழல் பந்து வீச்சாளர்கள் அதிகமாக விக்கட்டுகள் எடுத்திருக்கலாம். ஆயினும் வேகப்பந்து வீச்சாளர்கள் இலங்கை அணியின் மட்டையாளர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலைத் தந்தனர். இன்றைய தினத்தின் முதல் விக்கெட் வேகப் பந்துவீச்சிற்குச் சென்றது, பும்ராவின் ஒரு மயக்கும் மெதுவான பந்து, ஸ்டம்புக்குள் பிட்ச் செய்து, சரித் அசலங்காவை வீழ்த்தியது. ஒரு முனையில் பாத்தும் நிஸ்ஸங்க விடாமுயற்சியுடன் போராட, எஞ்சியவர்கள் விசித்திரமான பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தனர்.
மொஹமத் ஷமியின் ஒரு மோசமான சரிந்து வந்த பவுன்சரை லசித் எம்புல்தெனியவால் சமாளிக்க முடியவில்லை. ஜடேஜா 10 மற்றும் 11 பேட்டர்களுக்கு மிகவும் சிறப்பாகப் பந்துவீசினார். ஜடேஜா முதல் இன்னிங்க்சில் ஐந்து விக்கட் எடுத்தார். ஒரு அரிதான ஃபாலோ-ஆன் காரணமாக உடனடியாக மீண்டும் இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆட்டம் தொடங்கப்பட்டது.
மதிய உணவுக்கு முன் சாத்தியமான நான்கு ஓவர்களில், அஸ்வின் முதல் இன்னிங்ஸைப் போலவே இந்தியாவுக்கு முதல் விக்கெட்டைக் கொடுத்தார். இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்னேவை சிறப்பான பந்து வீச்சின் மூலம் ஷமி வெளியேற்றினார். இந்த சமயத்தில்தான் மேத்யூஸ் மற்றும் டி சில்வா 17 ஓவர் பார்ட்னர்ஷிப் ஆடினர்.
பின்னர் நடந்தது வரலாறு. அஷ்வின் 435 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து. ரிச்சர்ட் ஹாட்லீ, ரங்கனா ஹெராத் மற்றும் கபில் ஆகியோரை முந்தினார். அடுத்தது டேல் ஸ்டெய்னின் ரிகார்ட் (439 விக்கெட்டுகள்) இருக்கிறது.
இந்தியா 1-0 கணக்கில் இந்த டெஸ்ட் தொடரில் முன்னணியில் உள்ளது. அடுத்த டெஸ்ட் பெங்களூருவில் பகலிரவி ஆட்டமாக மார்சு 12 இல் தொடங்குகிறது.