மேற்குவங்காளத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதியுள்ள பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது விடைத்தாளில், புஷ்பா படத்தின் வசனத்தை எழுதி இருக்கிறான்.
அது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் திரைப்படத்தில் வரும் பாடல்களும், வசனங்களும் அவ்வளவு எளிதில் மக்கள் மனதை விட்டு நீங்குவதில்லை என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக மாறியிருக்கிறது புஷ்பா திரைப்படம்.
இந்தத் திரைப்படம் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில், இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அகில இந்திய வெளியீடாக திரைக்கு வந்துள்ளது.
அதாவது மாணவன் அவனது விடைத்தாளில், புஷ்பா, புஷ்பராஜ் விடை எழுத போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது புஷ்பா படத்தில், அல்லு அர்ஜுன் பேசும் புஷ்பா, புஷ்பராஜ், புஷ்பானா பிளவர்னு நினைச்சியா, ஃபயர்! என்ற இந்த டயலாக்கை, அந்த மாணவன் இப்படி மாற்றி எழுதியுள்ளான்.