நாடாளுமன்ற உணவகத்தில் உணவுகள் விலை ஏற்றம்: மானிய விலையில் கிடைக்காது

புது தில்லி,

நாடாளுமன்றத்தில் உள்ள உணவகங்களில் மானிய விலையில், உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இனி, இதற்கான மானியம் ரத்தாவதால், இன்று முதல் குறைந்த விலையில் உணவுப்பொருட்கள் கிடைக்காது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லாபம் நஷ்டம் இன்றி அசல் விலையில் உணவுப் பொருட்கள் விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி, 18 ருபாய்க்கு விற்கப்பட்டு வந்த வெஜ் தாலி இனி 30 ரூபாய்க்கும், நான்வெஜ் தாலி 33 ரூபாய்க்கு பதிலாக இனி 60 ரூபாய்க்கும் விற்கப்படும். 29 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சிக்கன் கறி 40 ரூபாய்க்கும் விற்கப்படும் என விலைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிச் சந்தையில், கடும் பணவீக்கம் நிலவி வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கு மானிய விலையில், உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக ஊடகங்களில் சர்ச்சை எழுந்து வந்தன. இதையடுத்து, இந்த விவகாரத்தை கவனிக்குமாறு, நாடாளுமன்ற உணவுக் குழுவுக்கு சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். இதை ஆய்வு செய்த நாடாளுமன்ற உணவுக்குழு அண்மையில் அறிக்கை அளித்தது. இதையடுத்து 6 ஆண்டுகளாக அமலில் இருந்த விலையை மாற்றி அமைத்து நாடாளுமன்ற அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இனி, இந்த விலை அவ்வப்போது மாற்றியமைக்கப்படும் என்று மக்களவைச் செயலர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள உணவகத்தில், உணவு உண்ண வரும் மக்களவை, மாநிலங்களவை, ஊடகவியலாளர்கள், பாதுகாப்புப் பிரிவினர், மற்றும் பார்வையாளர்கள் உட்பட அனைவருக்கும் இந்த விலைப் பட்டியல் பொருந்தும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories